பிளாஷ்பேக் : ஆண்பாவத்தில் 5 நாள் மட்டும் நடித்த ரேவதி | தமிழில் ரவுண்டு வருவாரா கிர்த்தி ஷெட்டி | ஜிஎஸ்டி சோதனை பற்றி விஷ்ணு மஞ்சு விளக்கம் | பிளாஷ்பேக் : என்.எஸ்.கே, மதுரம் ஜோடிக்கு போட்டியாக வந்த காமெடி ஜோடி | கிரேஸ் ஆண்டனிக்காக 5 மாதங்கள் காத்திருந்த ராம் | ஆஸ்கர் விருது விழா : கமலுக்கு அழைப்பு | நான் கலெக்டர் ஆகணும்னு அப்பா ஆசைப்பட்டார் : பட்டிமன்ற பேச்சாளர் ராஜா | விதார்த் நடிக்கும் ஆந்தாலாஜி கதை | ஜூலை இறுதியில் கூலி பாடல் வெளியீட்டு விழா | தலிபான்கள் ஒன்றும் இந்தப்பகுதியை ஆளவில்லையே? : கொந்தளிக்கும் சுரேஷ் கோபி பட இயக்குனர் |
‛சர்தார் -2, வா வாத்தியார்' போன்ற படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்த படங்களை அடுத்து ‛டாணாக்காரன்' படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் அவரது 29வது படத்தில் நடிக்கவுள்ளார். ட்ரீம் வாரீயர் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
இந்த படம் 1960களில் ராமேஸ்வரம் பின்னணியில் கடல் கொள்ளையர் கதைகளத்தில் உருவாகிறது. இந்தாண்டு மே மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் . இவரை தொடர்ந்து இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இவர் தமிழில் ஹீரோ, மாநாடு ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ‛ஜீனி' படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.