'ரெட்ரோ' : ரெமான்ஸ் படமாம், ஆக்ஷன் படம் இல்லையாம்… | ககொ ககொ - கா கா, விரைவில் ரீ ரிலீஸ் | 'தொடரும்' வரவேற்பு : மோகன்லால் அன்புப் பதிவு | நானிக்காக அனிருத் பாடிய தானு பாடல் வெளியீடு | பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | விஜய் சேதுபதியுடன் மோதும் பஹத் பாசில் | சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குன் வேணு எல்டண்டி. 'பலகம்' படத்தின் மூலம் புகழ்பெற்ற இவர் அடுத்து 'எல்லம்மா' என்ற படத்தை இயக்க இருந்தார். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதை. எல்லம்மா என்பதே ஹீரோயின் பெயர்தான். இந்த படத்தில் நடிக்க வேணு, நடிகர் நானியை அணுகியபோது கதை நன்றாக இருக்கிறது. பவர்புல்லான ஹீரோயின் பட்ஜெட் படத்தில் எனக்கு முக்கியத்துவம் இருக்காது என்று கூறி நடிக்க மறுத்துவிட்டார்.
இதனால் எல்லம்மா படத்தில் நடிக்க நானிக்கு பதில் நிதின் ஒப்பந்தம் செய்யப்பட்டடார். நாயகிக்கு ஒரே சாய்ஸ் சாய்பல்லவி தான் என்று முடிவு செய்து அவரை அணுகியபோது கதை கேட்டு வியந்த சாய்பல்லவி நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் ஒப்பந்தம் எதுவும் போடப்படவில்லை.
தற்போது அவர் ராமாயணம் என்ற மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் சீதையாக நடித்து வருகிறார். அதற்கு இடையில் எல்லம்மா என்கிற ஒரு கோபமான பெண்ணின் கேரக்டரில் நடித்தால் சீதா கேரக்டரின் அமைதி இருக்காது என்பதை உணர்ந்த சாய்பல்லவி எல்லம்மா படத்திலிருந்து விலகுவதாக கூறியுள்ளார்.
சாய்பல்லவி சீதையாக நடிப்பதால் அவர் நடிக்க மறுத்துள்ள 3வது படம் இது. தற்போது எல்லம்மாவாக நடிக்க வேறு நடிகையை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.