ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
மலையாளத் திரையுலகத்தில் நடிகரும் இயக்குனருமாக உள்ளவர் பிருத்விராஜ் சுகுமாரன். மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் மகேஷ்பாபுவின் 29வது படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஒடிஷா மாநிலத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு நடித்துள்ளார். ஆனால், பிருத்விராஜ் இப்படத்தில் நடிப்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அது குறித்து கேட்டபோது, மகேஷ்பாபுவுடன் ஒடிஷாவிற்கு சுற்றுலா சென்று வந்தேன் என்று கூறினார். இருப்பினும் அப்படத்தில் நடித்து வருவதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பின் மீடியா சந்திப்பில் அது பற்றி பேசுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பிருத்விராஜ் இயக்கி மோகன்லால் நடித்துள்ள 'எல் 2 எம்புரான்' படம் அடுத்த வாரம் மார்ச் 27ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் வேலைகளுக்கு இடையிலும் அவர் ராஜமவுலி படத்தில் நடித்துவிட்டு வந்துள்ளார்.