கை கட்டியபடி பேசுவார், வெள்ளை உடைகளை விரும்பி அணிவார்: பணிவுக்கும் உபசரிப்புக்கும் புகழ் பெற்ற ஏவி.எம்.சரவணன் | பிரபலங்கள் பட்டியல் 2025: தமிழ் நடிகர்கள், நடிகைகளுக்கு இடமில்லை… | சாய் பல்லவியால் மறுவாழ்வு பெற்றேன் ; இசையமைப்பாளர் நெகிழ்ச்சி | திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி |

விக்ரம் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் வீர தீர சூரன். சித்தா என்கிற மிகப்பெரிய வெற்றி படத்தை தொடர்ந்து இயக்குனர் எஸ்யு அருண்குமார் இயக்கியுள்ளார். இதில் நடிகர் எஸ்ஜே சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிக்க இன்னொரு மிக முக்கியமான வேடத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் திரை உலகில் அடியெடுத்து வைத்துள்ளார் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மார்ச் 27ல் படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்ட நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு பேசும்போது, "எனக்கு மூன்று முறை கேரள அரசு விருது கிடைத்துள்ளது. ஒரு முறை தேசிய விருது கிடைத்துள்ளது. இதன் பின்னணியில் ஒரு பெரிய கதை உண்டு. எனக்கு மொத்தம் மூன்று குழந்தைகள். முதல் முறை கேரளா அரசு விருது கிடைத்தபோது எனக்கு முதல் குழந்தை பிறந்தது. இரண்டாவது முறை கேரளா அரசு விருது கிடைத்தபோது இரண்டாவது குழந்தை பிறந்தது. மூன்றாவது முறையாக கேரள அரசு விருதும், தேசிய விருதும் கிடைத்த போது மூன்றாவது குழந்தை பிறந்தது. இதற்கு அடுத்ததாக ஆஸ்கர் விருது கிடைக்கும் என்றால் நான்காவது குழந்தையும் பெற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். இது பற்றி என்னுடைய மனைவி இடமும் பேசுவேன் என்று நகைச்சுவையுடன் பேச விக்ரம், எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட அரங்கத்தில் இருந்த அனைவருமே இவரது பேச்சை கைதட்டி ரசித்தனர்.