பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் | ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா | பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' | சென்னையில் நடந்த 80ஸ் நடிகர், நடிகைகள் ரீ யூனியன் | அரச கட்டளை, தளபதி, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் - ஞாயிறு திரைப்படங்கள் |
நட்சத்திர திருமணங்கள் இந்தியாவில் வேறு எந்த திரையுலகையும் விட பாலிவுட்டில் தான் அதிகம் நடைபெறுகின்றன. அந்த வகையில் கடந்த வருடம் பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இவர்கள் திருமணம் செய்து கொண்டதால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பல நாட்கள் அழுதேன் என்று கூறியுள்ளார் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் மகளான சான்வி.
இது குறித்து அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “கரண் ஜோஹர் இயக்கத்தில் வெளியான 'ஸ்டூடன்ட் ஆப் தி இயர்' என்கிற படத்தில் இருந்து நான் சித்தார்த் மல்ஹோத்ராவின் தீவிர ரசிகையாக இருந்தேன். என்னை அறியாமலேயே அவர் மீது ஒரு கிரஷ் ஏற்பட்டது. தொடர்ந்து எனது சோசியல் மீடியா பக்கத்தில் அவருடைய புகைப்படங்களாக பகிர்ந்து கொண்டு வந்தேன் ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட 700 புகைப்படங்களை நான் பகிர்ந்திருந்தேன்.
ஆனால் அவரது திருமணத்திற்கு பிறகு அனைத்து புகைப்படங்களையும் நான் நீக்கி விட்டேன். ஏனென்றால் ஒருவேளை சித்தார்த் அப்போது என்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் இடம்பெற்றுள்ள அவருடைய இந்த புகைப்படங்களை பார்க்கும் போது அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார் என்பதாலேயே அவற்றை நீக்கி விட்டேன்” என்று கூறியுள்ளார் சான்வி. அது மட்டுமல்ல சித்தார்த்தின் திருமண வீடியோவை பார்த்தபோது ஒரு சோகப்படம் பார்ப்பது போலவே உணர்ந்தேன் என்றும் அவர் கூறியுள்ளார்.