ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

பாலிவுட்டில் 70, 80களில் முன்னணி நடிகராக கோலோச்சியவர் நடிகர் தர்மேந்திரா. சீனியர் நடிகரான தர்மேந்திரா வரும் டிசம்பரில் 90 வயதை தொட இருக்கிறார். இந்த நிலையில் கடந்த அக்டோபரில் வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்று சோதனைகளை மேற்கொண்டார். அதன் பிறகு சமீபத்தில் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து அவரது மனைவியும் முன்னாள் நடிகையுமான ஹேமமாலினி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் நன்றி. தற்போது மருத்துவமனையில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் தர்மேந்திரா இருக்கிறார். அவர் விரைந்து குணமாக அனைவரும் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
அதேபோல தர்மேந்திரா தரப்பிலிருந்து அவரது உடல்நிலை குறித்து கூறும்போது, “இந்த சமயத்தில் தர்மேந்திரா மற்றும் அவரது குடும்பத்திற்கான பிரைவசசிக்கு அனைவரும் மதிப்பு கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் தர்மேந்திரா உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் அவரது மகள் ஈஷா தியோல் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ''தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. என் தந்தையின் உடல்நிலை சீராகவும், முன்னேற்றமாகவும் உள்ளது. என் தந்தை விரைவில் குணமடைய உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சல்மான்கான் நேரில் மருத்துவமனைக்கு சென்று தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து விசாரித்து விட்டு வந்துள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.