ஷாருக்கானின் கிங் பட வாய்ப்பை இழந்த நயன்தாரா | பயங்கரவாத தாக்குதலால் ‛தி பிக் பாலிவுட் ஒன்' நிகழ்ச்சியை தள்ளிவைத்த சல்மான் | அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த சூர்யா | ரெயின்போவை ரசிக்கும் மகன்கள் : நயன்தாரா | சமரச உடன்பாடு : நடிகர் தர்ஷன் மீதான வழக்கு தள்ளுபடி | தொடரும் பட சண்டைக்காட்சிகளுக்கு வரவேற்பு : நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்ன ஸ்டண்ட் சில்வா | பஹத் பாசிலை தொடர்ந்து நிவின்பாலியை இயக்கும் அகில் சத்யன் | 40 நாள் திட்டமிட்டு முன்கூட்டியே நிறைவடைந்த பிரணவ் மோகன்லால் படம் | நடனத்தில் மாறிய ஸ்டெப்ஸ்... நகைச்சுவையுடன் சரிசெய்த மஞ்சு வாரியர் | பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வரும் சமந்தா 'டிரலலா மூவிங் பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார். கனகவல்லி டாக்கீஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து முதல் படமாக 'சுபம்' என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.
ஹர்ஷித் மல்கிரெட்டி, ஷ்ரியா கொந்தம், சரண் பேரி, ஷாலின் கொன்டேபுடி, கவிரெட்டி ஸ்ரீனிவாஸ், ஷ்ரவானி ஆகிய ஆறு பேர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'சினிமா பன்டி' படத்தை இயக்கிய பிரவீன் கன்ட்ரேகுலா இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகளும் நிறைவடைந்து படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளனர். சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக அங்கேயே செட்டிலானவர் சமந்தா. அதனால் அவரது முதல் படத் தயாரிப்பை தெலுங்குப் படமாகவே எடுத்துள்ளார்.