பத்ம பூஷன் விருது பெற்றார் அஜித் | மூன்றாவது முறையாக சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் நயன்தாரா? | மூன்றாவது தெலுங்குப் படத்தை முடித்த 'திருடன் போலீஸ்' இயக்குனர் | விஜய் சேதுபதி படத்தில் கன்னட நடிகர் துனியா விஜய் | பத்மபூஷன் விருது நாளில், விஜய் ரசிகர்கள் மீது அஜித் ரசிகர்கள் கோபம் | சர்வானந்த் ஜோடியாக இரண்டு இளம் நாயகிகள் | சமந்தா தயாரித்த சுபம் படம் மே 9ல் ரிலீஸ் | சர்ச்சையான பஹல்காம் தாக்குதல் அறிக்கை : விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி | ''எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் லாலேட்டா'' ; வெளிப்படையாகவே கோரிக்கை வைத்த '2018' பட இயக்குனர் | சிம்புவுக்கு ஜோடியாகும் கயாடு லோகர் |
சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் கயாடு லோஹர். தமிழில் அவர் அறிமுகமான இந்த முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறிவிட்டார். படமும் வெற்றி படமாக அமைந்ததால் ராசியான நடிகை என்கிற பெயரும் கிடைத்துவிட்டது. இதையடுத்து அதர்வாவுடன் இதயம் முரளி என்கிற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படமும் விரைவில் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் கயாடு லோஹரின் பெயரில் சோசியல் மீடியாவில் குறிப்பாக பேஸ்புக் மற்றும் எக்ஸ் வலைதளங்களில் பல கணக்குகள் போலியாக துவங்கப்பட்டுள்ளன.
இதை கவனித்த கயாடு லோஹர் தனது அதிகாரப்பூர்வமான எக்ஸ் பக்கத்தில் இது குறித்து ரசிகர்களுக்கு ஒரு அலர்ட் கொடுக்கும் விதமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், “சோசியல் மீடியாவில் என்னுடைய இந்த எக்ஸ் கணக்கு தவிர என் பெயரில் எந்த கணக்கும் இல்லை. மற்றவை அனைத்தும் போலிகள், அதில் வெளியாகும் செய்திகள் எதையும் ரசிகர்கள் நம்ப வேண்டாம். நான் இந்த அதிகாரப்பூர்வ கணக்கின் மூலமாக சரியான நேரத்தில் உங்களுடன் சரியான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.