'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் |

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம் என்பது இன்னும் ஸ்பெஷல். 1965 காலகட்டத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்த கதையில் இப்படம் உருவாகிறது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க குரு சோமசுந்தரம் இணைந்துள்ளார். குரு சோமசுந்தரம் ஜோக்கர், மின்னல் முரளி, பாட்டில் ராதா, குடும்பஸ்தன் உள்ளிட்ட பல படங்களில் அவரின் அசாத்திய நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தவிர்த்து மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள இயக்குனர் பசில் ஜோசப் என்பவரும் இவர்களுடன் இணைந்து நடித்து வருகிறாராம். இந்த பசில் ஜோசப் அடுத்தபடியாக சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கவும் கதை சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.