ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

பான் இந்தியா இயக்குனரான ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா மற்றும் பலர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒரிசா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த 'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு ஒரிசாவில் நடைபெறும் மற்றுமொரு பெரிய படத்தின் படப்பிடிப்பு இது. இது குறித்து ஒரிசா மாநில துணை முதல்வர் பிரவதி பரிதா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
“முன்பு, மல்காங்கிரியில் 'புஷ்பா 2', இப்போது பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபுவின் 29வது படத்தில் தென்னிந்திய சூப்பர்ஸ்டார்களான மகேஷ் பாபு, பிருத்விராஜ் சுகுமாரன், சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட நடிகை பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கோராபுட்டில் நடைபெற்று வருகிறது.
ஒடிசாவில் திரைப்பட படப்பிடிப்புக்கு ஏராளமான சினிமா நிலப்பரப்புகள் உள்ளன என்பதை இது நிரூபிக்கிறது. இது ஒடிசா சுற்றுலாவுக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும். இது ஒரு முக்கிய படப்பிடிப்பு இடமாக மாறும். ஒடிசாவின் திறனை ஆராய அனைத்து திரைப்படத் துறைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். மேலும், முழு ஆதரவையும் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பையும் தருவோம் என உறுதியளிக்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.




