ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
பான் இந்தியா இயக்குனரான ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா மற்றும் பலர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒரிசா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த 'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு ஒரிசாவில் நடைபெறும் மற்றுமொரு பெரிய படத்தின் படப்பிடிப்பு இது. இது குறித்து ஒரிசா மாநில துணை முதல்வர் பிரவதி பரிதா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
“முன்பு, மல்காங்கிரியில் 'புஷ்பா 2', இப்போது பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபுவின் 29வது படத்தில் தென்னிந்திய சூப்பர்ஸ்டார்களான மகேஷ் பாபு, பிருத்விராஜ் சுகுமாரன், சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட நடிகை பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கோராபுட்டில் நடைபெற்று வருகிறது.
ஒடிசாவில் திரைப்பட படப்பிடிப்புக்கு ஏராளமான சினிமா நிலப்பரப்புகள் உள்ளன என்பதை இது நிரூபிக்கிறது. இது ஒடிசா சுற்றுலாவுக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும். இது ஒரு முக்கிய படப்பிடிப்பு இடமாக மாறும். ஒடிசாவின் திறனை ஆராய அனைத்து திரைப்படத் துறைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். மேலும், முழு ஆதரவையும் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பையும் தருவோம் என உறுதியளிக்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.