‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
சிவாஜிராவ் கெய்க்வாட் கே.பாலச்சந்தரால் ரஜினிகாந்த் ஆனார். ரசிகர்களால் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். ஆனால் ரஜினி என்ற பெயர் சினிமாவிற்கு புதிதல்ல. 1940களின் இறுதி பகுதியில் ரஜினி என்ற பெயரில் ஒரு நடிகை இருந்தார்.
புதுக்கோட்டையை சேர்ந்த மேடை நடன கலைஞர் இவர். இயற்பெயர் கோவிந்தம்மாள். ஆனால் இந்த பெயரை ராஜாபாலா என்று மாற்றிக் கொண்டு சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமானார். பல படங்களில் குரூப் நடனங்களில் ஆடினார். தமிழ், தெலுங்கு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.
அந்த காலத்தில் ஒரு ஹேர் ஆயில் விளம்பரத்திற்கு போஸ் கொடுத்தார். பிளவுஸ் அணியாமல் நீண்ட தலைமுடியுடன் அவர் கொடுத்த போஸ் பிரபலமானது. தமிழகம் முழுக்க அந்த விளம்பர போர்ட் அமைக்கப்பட்டது. அதன் மூலம் பிரபலமான அவர் 'மதனமாலா' என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அப்போது தனது பெயரை ரஜினி என்று மாற்றிக் கொண்டார். இந்த படத்தில் அவர் நடன கலைஞராகவே நடித்தார்.
மன்னரின் அரசவை நாட்டியக்காரி மதனமாலா. அந்த அரசவைக்கு வரும் கவிஞர் விக்ரமன் என்பவர் மன்னனை புகழ்ந்து பாடுகிறார். அந்த பாடலுக்கு மதனமாலா நடனம் ஆடுகிறார். பாடல் முடிந்ததும் மகிழ்ந்துபோன மன்னர் என்ன வேண்டும் கேள் என்று விக்ரமனை கேட்கிறார். அதற்கு அவர் மதனமாலா என் மனைவியாக வேண்டும் என்கிறார். இதனால் கோபம் அடையும் மன்னர், விக்ரமனை நாடு கடத்துகிறார். மதனமாலாவை தனது ஆசை நாயகியாக வைத்துக் கொள்ள மன்னர் திட்டமிடுகிறார். நாடு கடத்தப்பட்ட விக்ரமன் எப்படி மதனமாலாவை மனைவியாக அடைகிறார் என்பதுதான் படத்தின் கதை.
இந்த படம் வெற்றி பெற்றாலும் ரஜினிக்கு தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. இரண்டாவது நாயகி, குணசித்ர வேடங்களில் நடித்தார். சென்னை புரசைவாக்கத்தில் நீண்ட காலம் வாழ்ந்து மறைந்தார்.