மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? |
1984ல் ஹிந்தி சினிமாவில் அறிமுகமான மாதுரி தீக்சித், 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பத்மபூஷன் விருதை பெற்றுள்ள இவர், 1999ல் மருத்துவர் ஸ்ரீராம் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். கடைசியாக 'பூல் புலையா 3' ஹிந்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 57 வயதிலும் இணையத்தொடர்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற மாதுரி தீக்சித் பேசியதாவது: பெண்கள் காலத்துக்கும் தங்களை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆண்களுக்கு சமமானவர்கள் பெண்கள் என பார்வையாளர்களை எங்களாலும் ஈர்க்க முடியுமென ஒவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டியுள்ளது. உண்மையில் சினிமா துறையில் பாலின பாகுபாடு உள்ளது. குழந்தை அடியெடுத்து வைப்பதுபோல ஒவ்வொன்றாக பொறுமையாக எடுத்து வைத்து முன்னேறுகிறோம்.
பாகுபாடு நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்த இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதை நோக்கிதான் தினமும் வேலை செய்து வருகிறோம். சம்பளத்தில் கூட பாகுபாடு உள்ளது. இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு பெண்களிடம் வந்து சேர்வதை ஆச்சரியமாகப் பார்க்கிறேன். இதற்கு நடிகர்கள்தான் பதிலளிக்க வேண்டுமென நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.