2025ல் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை யார் ? | மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா! | ரெட்ரோ படம் சூர்யாவுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது! - கார்த்திக் சுப்பராஜ் | 500 கோடி நிகர வசூலைக் கடந்த 'ச்சாவா' | சினிமா துறையில் பாலின பாகுபாடு: மாதுரி தீக்சித் கவலை | பிரபு, வெற்றி இணைந்து நடித்து ரிலீசுக்கு தயாரான 'ராஜபுத்திரன்' | 'ஹிட் 3' பார்க்காதீர்கள்: நானி சொன்ன காரணம் தெரியுமா? | ''ரசிகர்கள் மாறிவிட்டாங்க...'': ஷில்பா ஷெட்டி | 'அவள்' பட இயக்குனருடன் இணைகிறாரா ரவி மோகன்? | பராசக்தி இந்த காலகட்டத்திற்கு பொருந்தும்! - ஆகாஷ் பாஸ்கரன் |
2025ம் வருடம் ஆரம்பமாகி இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்துள்ளன. கடந்த மாதம் பிப்ரவரி 14ம் தேதி அதிகபட்சமாக 9 படங்கள் வெளியாகியது. அது போலவே நேற்று முன்தினம் 7 படங்கள் வெளிவந்தது.
அதிகமான படங்கள் வெளிவருவதால் அவற்றிற்கு குறிப்பிடத்தக்க அளவில் தியேட்டர்கள் கிடைப்பதில்லை. சில படங்களுக்கு ஒரு சில தியேட்டர்களில் ஒரே ஒரு காட்சி மட்டுமே கிடைக்கும் நிலையும் வந்தது.
வரும் வாரம் மார்ச் 14ம் தேதியும் 8 படங்கள் வரை வெளியாக உள்ளது. “டெக்ஸ்டர், கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல், குற்றம் குறை, மாடன், பெருசு, ராபர், ஸ்வீட் ஹார்ட், வருணன்” ஆகியவற்றுடன் 'ரஜினி முருகன், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' ஆகிய படங்களும் ரீ-ரிலீஸ் ஆகின்றன.
தொடர்ந்து அடிக்கடி இத்தனை படங்கள் ஒரே வாரத்தில் வெளிவருவதால் யாருக்கும் எந்த பலனும் கிடைப்பதில்லை. அவ்வளவு படங்களையும் பார்க்க மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். தற்போது தேர்வுகளும் நடந்து வருகிறது. ஆனால், பட வெளியீட்டை முறைப்படுத்த வேண்டிய சங்கங்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டு திரையுலகத்தில் எழுந்துள்ளது.