என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
2025ம் வருடம் ஆரம்பமாகி இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்துள்ளன. கடந்த மாதம் பிப்ரவரி 14ம் தேதி அதிகபட்சமாக 9 படங்கள் வெளியாகியது. அது போலவே நேற்று முன்தினம் 7 படங்கள் வெளிவந்தது.
அதிகமான படங்கள் வெளிவருவதால் அவற்றிற்கு குறிப்பிடத்தக்க அளவில் தியேட்டர்கள் கிடைப்பதில்லை. சில படங்களுக்கு ஒரு சில தியேட்டர்களில் ஒரே ஒரு காட்சி மட்டுமே கிடைக்கும் நிலையும் வந்தது.
வரும் வாரம் மார்ச் 14ம் தேதியும் 8 படங்கள் வரை வெளியாக உள்ளது. “டெக்ஸ்டர், கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல், குற்றம் குறை, மாடன், பெருசு, ராபர், ஸ்வீட் ஹார்ட், வருணன்” ஆகியவற்றுடன் 'ரஜினி முருகன், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' ஆகிய படங்களும் ரீ-ரிலீஸ் ஆகின்றன.
தொடர்ந்து அடிக்கடி இத்தனை படங்கள் ஒரே வாரத்தில் வெளிவருவதால் யாருக்கும் எந்த பலனும் கிடைப்பதில்லை. அவ்வளவு படங்களையும் பார்க்க மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். தற்போது தேர்வுகளும் நடந்து வருகிறது. ஆனால், பட வெளியீட்டை முறைப்படுத்த வேண்டிய சங்கங்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டு திரையுலகத்தில் எழுந்துள்ளது.