காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
2025ம் வருடம் ஆரம்பமாகி இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்துள்ளன. கடந்த மாதம் பிப்ரவரி 14ம் தேதி அதிகபட்சமாக 9 படங்கள் வெளியாகியது. அது போலவே நேற்று முன்தினம் 7 படங்கள் வெளிவந்தது.
அதிகமான படங்கள் வெளிவருவதால் அவற்றிற்கு குறிப்பிடத்தக்க அளவில் தியேட்டர்கள் கிடைப்பதில்லை. சில படங்களுக்கு ஒரு சில தியேட்டர்களில் ஒரே ஒரு காட்சி மட்டுமே கிடைக்கும் நிலையும் வந்தது.
வரும் வாரம் மார்ச் 14ம் தேதியும் 8 படங்கள் வரை வெளியாக உள்ளது. “டெக்ஸ்டர், கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல், குற்றம் குறை, மாடன், பெருசு, ராபர், ஸ்வீட் ஹார்ட், வருணன்” ஆகியவற்றுடன் 'ரஜினி முருகன், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' ஆகிய படங்களும் ரீ-ரிலீஸ் ஆகின்றன.
தொடர்ந்து அடிக்கடி இத்தனை படங்கள் ஒரே வாரத்தில் வெளிவருவதால் யாருக்கும் எந்த பலனும் கிடைப்பதில்லை. அவ்வளவு படங்களையும் பார்க்க மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். தற்போது தேர்வுகளும் நடந்து வருகிறது. ஆனால், பட வெளியீட்டை முறைப்படுத்த வேண்டிய சங்கங்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டு திரையுலகத்தில் எழுந்துள்ளது.