காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

2025ம் வருடம் ஆரம்பமாகி இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்துள்ளன. கடந்த மாதம் பிப்ரவரி 14ம் தேதி அதிகபட்சமாக 9 படங்கள் வெளியாகியது. அது போலவே நேற்று முன்தினம் 7 படங்கள் வெளிவந்தது.
அதிகமான படங்கள் வெளிவருவதால் அவற்றிற்கு குறிப்பிடத்தக்க அளவில் தியேட்டர்கள் கிடைப்பதில்லை. சில படங்களுக்கு ஒரு சில தியேட்டர்களில் ஒரே ஒரு காட்சி மட்டுமே கிடைக்கும் நிலையும் வந்தது.
வரும் வாரம் மார்ச் 14ம் தேதியும் 8 படங்கள் வரை வெளியாக உள்ளது. “டெக்ஸ்டர், கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல், குற்றம் குறை, மாடன், பெருசு, ராபர், ஸ்வீட் ஹார்ட், வருணன்” ஆகியவற்றுடன் 'ரஜினி முருகன், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' ஆகிய படங்களும் ரீ-ரிலீஸ் ஆகின்றன.
தொடர்ந்து அடிக்கடி இத்தனை படங்கள் ஒரே வாரத்தில் வெளிவருவதால் யாருக்கும் எந்த பலனும் கிடைப்பதில்லை. அவ்வளவு படங்களையும் பார்க்க மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். தற்போது தேர்வுகளும் நடந்து வருகிறது. ஆனால், பட வெளியீட்டை முறைப்படுத்த வேண்டிய சங்கங்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டு திரையுலகத்தில் எழுந்துள்ளது.




