தெலுங்கானா மாநில சினிமா விருதுகள்: நேரில் விருது பெற்ற அல்லு அர்ஜுன் | அப்பாவை அப்படி பார்த்தது மகிழ்ச்சி: கீர்த்திபாண்டியன் நெகிழ்ச்சி | கவிஞர்.நா.முத்துக்குமார் இசைச்கச்சேரி: கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு | மணிரத்னத்தை மறுத்தாரா ரஜினி? | விரைவில் இயக்குனராகும் பார்த்திபன் மகன் ராதாகிருஷ்ணன் | தயாராகிறார் அடுத்த கேப்டன் | நட்பு வட்டார படங்களில் நடிப்பு: புலம்பும் நடிகை | கலையும் கருணையும்... அருண்மொழி தேவன் | நடிப்பு, பாட்மின்டன் ஸ்ரீசுவேதா-வின் விருப்பங்கள் | காதோடு தான் பேசுவேன்...! குரலுக்கு ஒரு கோபிகா |
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்வது அதிகமாகி வருகிறது. ஏற்கனவே கில்லி, 3, வாரணம் ஆயிரம், மயக்கம் என்ன, பாபா, பில்லா போன்ற படங்கள் ரீ ரிலீஸ் ஆகி மீண்டும் ஒரு குறிப்பிடத்தக்க வசூலை பெற்றன.
இந்தநிலையில் வருகின்ற மார்ச் 14ம் தேதி அன்று இரு படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின்றன. கடந்த 2004ம் ஆண்டில் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், அசின், நதியா, பிரகாஷ்ராஜ் நடித்து வெளிவந்த 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படமும், கடந்த 2016ம் ஆண்டில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி நடித்து வெளிவந்த 'ரஜினி முருகன்' படமும் ஒரே நாளில் ரீ-ரிலீஸ் ஆவதாக சம்பந்தப்பட்ட படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி இருவரும் தற்போது சுதா இயக்கத்தில் ‛பராசக்தி' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.