பத்ம பூஷன் விருது பெற்றார் அஜித் | மூன்றாவது முறையாக சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் நயன்தாரா? | மூன்றாவது தெலுங்குப் படத்தை முடித்த 'திருடன் போலீஸ்' இயக்குனர் | விஜய் சேதுபதி படத்தில் கன்னட நடிகர் துனியா விஜய் | பத்மபூஷன் விருது நாளில், விஜய் ரசிகர்கள் மீது அஜித் ரசிகர்கள் கோபம் | சர்வானந்த் ஜோடியாக இரண்டு இளம் நாயகிகள் | சமந்தா தயாரித்த சுபம் படம் மே 9ல் ரிலீஸ் | சர்ச்சையான பஹல்காம் தாக்குதல் அறிக்கை : விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி | ''எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் லாலேட்டா'' ; வெளிப்படையாகவே கோரிக்கை வைத்த '2018' பட இயக்குனர் | சிம்புவுக்கு ஜோடியாகும் கயாடு லோகர் |
மறைந்த பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி. சரண். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார். இது அல்லாமல் சரோஜா, துரோகி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சென்னை 28, மழை, ஆரண்ய காண்டம் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
தற்போது எஸ்.பி.பி.சரண் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அரசியல் கதைகளத்தை பின்புலமாக கொண்டு உருவாகி வருகிறது. படமாக அல்லாமல் வெப் தொடராக தயாராகிறது. இதற்கு 'அதிகாரம்' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் அதுல்யா ரவி, அபிராமி, தேவ், அரவிந்த் ஆகாஷ், ஜான் விஜய் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்போது இந்த வெப்தொடர் இறுதிகட்டத்தில் உள்ளது.