மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

மறைந்த பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி. சரண். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார். இது அல்லாமல் சரோஜா, துரோகி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சென்னை 28, மழை, ஆரண்ய காண்டம் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
தற்போது எஸ்.பி.பி.சரண் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அரசியல் கதைகளத்தை பின்புலமாக கொண்டு உருவாகி வருகிறது. படமாக அல்லாமல் வெப் தொடராக தயாராகிறது. இதற்கு 'அதிகாரம்' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் அதுல்யா ரவி, அபிராமி, தேவ், அரவிந்த் ஆகாஷ், ஜான் விஜய் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்போது இந்த வெப்தொடர் இறுதிகட்டத்தில் உள்ளது.




