'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தனுஷ் நடித்த 3 என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினி. அந்த படத்தில்தான் அனிருத்தும் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு கவுதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். பின்னர் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்த லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் ரஜினியும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படமும் தோல்வியடைந்தது.
இந்த நிலையில் தனது அடுத்த படத்தை புதுமுகங்களை வைத்து தயாரித்து இயக்கப் போவதாக கூறி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினி. அந்த புதிய படத்திற்கான கதையை தற்போது அவர் எழுதி முடித்து விட்டார். இதையடுத்து நேற்று திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்ற ஐஸ்வர்யா ரஜினி, முருகன் திருவடியில் தன்னுடைய புதிய படத்தின் கதையை வைத்து தரிசனம் செய்துள்ளார். அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன .