பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தனுஷ் நடித்த 3 என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினி. அந்த படத்தில்தான் அனிருத்தும் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு கவுதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். பின்னர் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்த லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் ரஜினியும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படமும் தோல்வியடைந்தது.
இந்த நிலையில் தனது அடுத்த படத்தை புதுமுகங்களை வைத்து தயாரித்து இயக்கப் போவதாக கூறி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினி. அந்த புதிய படத்திற்கான கதையை தற்போது அவர் எழுதி முடித்து விட்டார். இதையடுத்து நேற்று திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்ற ஐஸ்வர்யா ரஜினி, முருகன் திருவடியில் தன்னுடைய புதிய படத்தின் கதையை வைத்து தரிசனம் செய்துள்ளார். அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன .