50வது நாளில் 'டூரிஸ் பேமிலி' | பி.எம்.டபிள்யூ எக்ஸ்-1 காரை வாங்கிய நடிகர் விதார்த்! | தனி விமானம் வாங்கினாரா சின்னத்திரை நடிகை? | சூர்யா 45வது படத்தின் டைட்டில் 'கருப்பு': போஸ்டர் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி! | கன்னடத்தில் அடி எடுத்து வைத்த 'அனிமல்' பட நடிகர் உபேந்திரா | 'தி ராஜா சாப்' டீசரை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் | அடுத்த தலைமுறைக்கு இதைத்தான் கொடுக்க போகிறோமா ? நடிகை மஞ்சிமா காட்டம் | மம்முட்டி நலமாக இருக்கிறார் ; ராஜ்யசபா எம்பி வெளியிட்ட தகவல் | அமீர்கான் படக்குழுவினரை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய ஷாருக்கான் | கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கிய காயத்ரி |
நாக சைதன்யா நடித்து கடந்த மாதம் வெளியான 'தண்டேல்' தெலுங்குப் படம் 100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. அவரது முதல் 100 கோடி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
'பொன்னியின் செல்வன்' நடிகையான சோபிதா துலிபலா உடன் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார் நாக சைதன்யா. திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த முதல் படமே 100 கோடி வசூலைத் தந்ததில் இருவருமே மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதனால், ஜாலியாக டூர் சென்றுள்ளனர். இருவரும் நெதர்லாந்து நாட்டிற்குச் சென்றுள்ளனர். 'தண்டேல்' படத்திற்காக நாக சைதன்யா ஊர் ஊராகச் சுற்றி நிறைய புரமோஷன் செய்தார். அதனால் ஓய்வெடுக்கவே மனைவியுடன் டூர் சென்றுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'தண்டேல்' பெற்ற வெற்றியால் அடுத்த படத்தையும் அது போலவே கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறாராம் நாக சைதன்யா.