இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! | தனுசை ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா! | 96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி |

விடாமுயற்சி படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன்தாஸ், சுனில், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
இதன்பிறகு அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சிவா, நித்திலன் சாமிநாதன், விஷ்ணுவர்தன் உள்ளிட்ட இயக்குனர்கள் அஜித்திடத்தில் கதை சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் அஜித்குமார் கார் ரேஸ் போட்டிகளை முடித்துவிட்டு வந்த பிறகுதான் அவரது அடுத்த படத்தை இயக்குவது யார் என்பது தெரியும் என்று அவரது வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
இந்த நேரத்தில், பா. பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், படங்களை தொடர்ந்து தற்போது இட்லி கடை படத்தை இயக்கி நடித்து வரும் தனுஷ், அஜித்தின் அடுத்த படத்தை தயாரித்து இயக்குவதாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி உள்ளது. இந்த செய்தியை அஜித் ரசிகர்கள் வரவேற்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.




