ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் | ராஜா சாப் பட இயக்குனருக்கு விஎப்எக்ஸ் சூப்பர்வைசர் மிரட்டல் ; தயாரிப்பாளர் வெளியிட்ட பகீர் தகவல் | இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! |
இசையின் ராஜாவாக இருப்பவர் இசையமைப்பாளர் இளையராஜா. 1500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். தற்போதும் பல படங்களில் பிஸியாக இசையமைத்து வருகிறார். தமிழகத்தின் பல்வேறு ஊர்கள், வெளிநாடுகளில் இசைக் கச்சேரிகளை அரங்கேற்றி வருகிறார். இதுதவிர சிம்பொனி இசை பணியிலும் உள்ளார்.
இந்நிலையில் வருகிற மார்ச் 8ம் தேதி லண்டனில் தனது முதல் சிம்பொனியை இளையராஜா அரங்கேற்ற உள்ளார். இதற்காக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் உள்ள இளையராஜாவை நேரில் சென்று வாழ்த்தி, அவருக்கு நினைவுப் பரிசை வழங்கினார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் இளையராஜாவை சந்தித்த வீடியோவை பகிர்ந்து, ‛‛இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது... ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று லண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா. தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.
அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்!'' என குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜா நன்றி
‛‛முதல்வர் ஸ்டாலின், தங்கள் நிறைந்த பணிச்சூழலில் நேரம் ஒதுக்கி நேரில் வந்து வாழ்த்தியதிலும், இசைக்கு அளித்த பேராசியும் என்னை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தன! மிக்க நன்றி!'' என இளையராஜா வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.