'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
'புஷ்பா 2' படம் மூலம் பான் இந்தியா ஸ்டார் என்பதையும் தாண்டி வசூல் ஸ்டார் என்ற பெயரைப் பெற்றார் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன். அவரது அடுத்த படம் திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கும் படம்தான் என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. முன்னணி நடிகர்களின் படங்களை அப்படம் தயாரித்துள்ளது. அந்நிறுவனத்தின தயாரிப்பாளரான நாக வம்சி, சமீபத்திய சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அல்லு அர்ஜுன், திரிவிக்ரம் சீனிவாஸ் படம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார்.
அப்படம் சமூக - புராணப் படமாக இருக்கும் என்றும், இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் படம் ஆரம்பமாகும் என்றும் தெரிவித்துள்ளார். 'புஷ்பா 2' படத்தை விடவும் அந்தப் படத்தை பிரம்மாண்ட எடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அல்லு அர்ஜுன், த்ரிவிக்ரம் சீனிவாஸ் கூட்டணி ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் மீண்டும் இணைகிறது.
அட்லியும் அவரது அடுத்த படத்திற்காக அல்லு அர்ஜுனிடம் பேசி வருவதாகத் தகவல் வெளியானது. ஆனால், அப்படம் இப்போதைக்கு ஆரம்பமாவதாகத் தெரியவில்லை.