சினிமாவில் பிஸி, அதேசமயம்... கார்த்தியின் மறுபக்கம் | ஜூலை 11ல் அனுஷ்காவின் 'காதி' ரிலீஸ் | இளையராஜாவை வாழ்த்தாத சினிமா பிரபலங்கள் | பந்தா இல்லாத நாகர்ஜூனா | விக்ரம் சுகுமாரனின் மறைவுக்கு அதிக வேலைப்பளு காரணமா? : நடிகை விஜி சந்திரசேகர் வேதனை | நூறு ஸ்ரேயா கோஷல்களை தூக்கி சாப்பிட்டு விடுவார் : பாடகி 'தீ' குறித்து சின்மயி புகழாரம் | பஹத் பாசில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதில்லை: நடிகர் வெளியிட்ட ஆச்சரிய தகவல் | மீண்டும் தலைவராக விரும்பும் மோகன்லால்... : ஆனால் ஒரு நிபந்தனையுடன்? | ஐந்து வருடமாக ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன் : விஜய் பட நாயகி ஓபன் டாக் | தக்லைப் படத்தின் 'விண்வெளி நாயகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது! |
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அமெரிக்காவில் சினிமா குறித்த படிப்பை படித்துவிட்டு கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகப் போகிறார். ஏற்கனவே ஒரு குறும்படத்தை இயக்கியுள்ள ஜேசன் சஞ்சய் அதையடுத்து லைகா நிறுவனத்தில் ஒரு கதை சொல்லி, அதில் நடிப்பதற்கு பல நடிகர்களிடத்தில் கதை சொல்லி வந்தவர் இறுதியில் சந்தீப் கிஷனிடம் சொல்லி ஓகே செய்தார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிறது.
இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி வருடக்கணக்கில் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகாததால் இப்படம் டிராப் ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறதாம்.
இந்நிலையில் நடிகர் சந்தீப் கிஷன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது வெளியே வந்த அவரிடத்தில் , விஜய் மகன் படத்தில் நடிக்கிறீர்களே. படப்பிடிப்பு தொடங்கி விட்டதா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு சந்தீப், ‛‛விஜய் மகன் என்று சொல்லாதீர்கள். ஜேசன் சஞ்சய் என்று அவரது பெயரை சொல்லுங்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் ஒரு சிறந்த படமாக வரும் என்று நம்புகிறேன்'' என்றார்.