யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அமெரிக்காவில் சினிமா குறித்த படிப்பை படித்துவிட்டு கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகப் போகிறார். ஏற்கனவே ஒரு குறும்படத்தை இயக்கியுள்ள ஜேசன் சஞ்சய் அதையடுத்து லைகா நிறுவனத்தில் ஒரு கதை சொல்லி, அதில் நடிப்பதற்கு பல நடிகர்களிடத்தில் கதை சொல்லி வந்தவர் இறுதியில் சந்தீப் கிஷனிடம் சொல்லி ஓகே செய்தார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிறது.
இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி வருடக்கணக்கில் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகாததால் இப்படம் டிராப் ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறதாம்.
இந்நிலையில் நடிகர் சந்தீப் கிஷன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது வெளியே வந்த அவரிடத்தில் , விஜய் மகன் படத்தில் நடிக்கிறீர்களே. படப்பிடிப்பு தொடங்கி விட்டதா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு சந்தீப், ‛‛விஜய் மகன் என்று சொல்லாதீர்கள். ஜேசன் சஞ்சய் என்று அவரது பெயரை சொல்லுங்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் ஒரு சிறந்த படமாக வரும் என்று நம்புகிறேன்'' என்றார்.