போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அமெரிக்காவில் சினிமா குறித்த படிப்பை படித்துவிட்டு கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகப் போகிறார். ஏற்கனவே ஒரு குறும்படத்தை இயக்கியுள்ள ஜேசன் சஞ்சய் அதையடுத்து லைகா நிறுவனத்தில் ஒரு கதை சொல்லி, அதில் நடிப்பதற்கு பல நடிகர்களிடத்தில் கதை சொல்லி வந்தவர் இறுதியில் சந்தீப் கிஷனிடம் சொல்லி ஓகே செய்தார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிறது.
இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி வருடக்கணக்கில் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகாததால் இப்படம் டிராப் ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறதாம்.
இந்நிலையில் நடிகர் சந்தீப் கிஷன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது வெளியே வந்த அவரிடத்தில் , விஜய் மகன் படத்தில் நடிக்கிறீர்களே. படப்பிடிப்பு தொடங்கி விட்டதா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு சந்தீப், ‛‛விஜய் மகன் என்று சொல்லாதீர்கள். ஜேசன் சஞ்சய் என்று அவரது பெயரை சொல்லுங்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் ஒரு சிறந்த படமாக வரும் என்று நம்புகிறேன்'' என்றார்.