ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலும் நடுவராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பெயர் பெற்றார். இவருக்கு ஏற்கனவே ஸ்ருதி என்பவருடன் திருமணமாகியுள்ள நிலையில் தற்போது இருவரும் விவாகரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும், சினிமாவில் பிரபல ஆடை வடிவமைப்பாளாராக பணியாற்றிய ஜாய் கிரிஸில்டா என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் விரைவில் இதுகுறித்து வெளிப்படையாக அறிவிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் செய்திகள் கசிந்து வருகிறது.
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, 'பொன்மகள் வந்தாள்' படத்தின் இயக்குநர் ஜே.ஜே. பெட்ரிக்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், அவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக பெட்ரிக்கை பிரிந்துவிட்ட கிரிஸில்டா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போது மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஆடை வடிவமைப்பாளராக வேலை செய்து வந்தார். அப்போது இவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், ரங்கராஜன் தன் முதல் மனைவி ஸ்ருதிக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கடந்த காதலர் தினத்தன்று இதை உறுதி செய்யும் வகையில் ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராமில் காதலர் தினத்தன்று வெளியிட்ட பதிவில், 'காதலர் தினத்தை மாதம்பட்டி ரங்கராஜனுடன் கொண்டாடினேன். அவர் எனக்கு பூ வாங்கி தந்தார்' என குறிப்பிட்டிருந்தார். மேலும் ரங்கராஜூடன் எடுத்துகொண்ட பல புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இதனால், இருவரது உறவும் உண்மைதான் என்பது உறுதியாகியுள்ளது.