இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு |

வானொலி நிகழ்ச்சி வர்ணனையாளாரக மக்கள் மனதில் இடம்பிடித்த மிர்ச்சி செந்தில் அதன்பின் சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிகராக செந்திலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். சரவணன் மீனாட்சி தொடரில் தன்னுடன் ஜோடியாக நடித்த ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் ஸ்ரீஜா நடிக்கவில்லை. குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார். செந்தில் ஜீ தமிழில் அண்ணா தொடரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், செந்தில் தற்போது புதிதாக கபே பிசினஸில் இறங்கியிருக்கிறார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், 'திருவல்லாவில் கபே ஒன்று விலைக்கு வந்தது. ஸ்ரீஜா அதை வாங்கி நடத்தலாம்னு சொன்னாங்க. நானும் ஓகே சொல்லிட்டேன். ஆனால், வேலை அதிகமாயிடுச்சு. முன்னாடி படப்பிடிப்பு முடிஞ்சதும் வீட்டுக்கு போய்டுவேன். இப்ப கேரளாவுக்கு சென்று கபே வேலைகளை பார்க்க வேண்டியிருக்கு. மற்றபடி நிர்வாகம் அனைத்தும் ஸ்ரீஜா தான் பாத்துகிறாங்க' என அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.