'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

தெலுங்குத் திரையுலகத்தின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் போசனி கிருஷ்ண முரளி. அவரை ஆந்திர போலீசார் திடீரென கைது செய்துள்ளனர். கடந்த ஆட்சியின் போது போசனி, பவன் கல்யாண் பற்றி பல்வேறு விதமான சர்ச்சைக்குரிய பேச்சுக்களைப் பேசியுள்ளார். பவன் கல்யாணின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் கமெண்ட் செய்துள்ளார்.
ஆட்சி மாறிய பின்பும் இதுவரையில் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஹைதராபாத், கச்சிபவுலியில் உள்ள போசனி வீட்டிற்குச் சென்ற அனந்த்பூர் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். அதன்பின் அவருக்கு மருத்துவ பரிசோதனைகளைச் செய்துள்ளனர்.
தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக போசனி ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் அவரைக் கைது செய்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் அவரைக் கைது செய்துள்ளதாக போசனி மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
பவன் கல்யாணை திருப்திப்படுத்தவே இந்த நடவடிக்கையை சந்திரபாபு நாயுடு எடுத்துள்ளதாக ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்து பவன் கல்யாண் பற்றி அதிகமாகக் கமெண்ட் செய்த ராம்கோபால் வர்மா கைது செய்யப்படலாம் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.




