மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

ஒரு காலத்தில் சினிமாவில் கதாநாயகிகளுக்குள் ஒரு பொறாமை இருந்தது. ஆனால், இந்தக் காலத்தில் அப்படியெல்லாம் இல்லாமல் பலரும் நட்பாகவே பழகுகிறார்கள். ஒருவரை மற்றொருவர் பாராட்டிக் கொள்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்து வரும் சமந்தா சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் 'சாட்' செய்தார். அப்போது அவருக்குப் பிடித்தமான கதாநாயகிகள் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு வெளிப்படையான பதிலளித்துள்ளார்.
“சிலரது நடிப்பு என்னை சமீபத்தில் வெகுவாகக் கவர்ந்தது. அந்தப் பெண்களின் நடிப்பை நேசித்தேன், அவர்கள் எடுத்த ரிஸ்க்கும் நேசிக்க வைத்தது. 'உள்ளொழுக்கு' படத்தில் பார்வதி, 'சூக்ஷ்ம தர்ஷினி' படத்தில் நஸ்ரியா, 'அமரன்' படத்தில் சாய் பல்லவி, 'ஜிக்ரா' படத்தில் ஆலியா பட், 'CTRL' படத்தில் அனன்யா பாண்டே, 'ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்' படத்தில் கனி, திவ்ய பிரபா, ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்கள். இந்த ஆண்டும் அவர்களது சிறந்த படங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.