விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் | நடிகர் பாலாவின் மனைவிக்கு லாட்டரியில் 25 ஆயிரம் பரிசு |
சினிமா உள்ளிட்ட இந்திய பொழுதுபோக்கு துறையின் மாநாடு (பிக்கி) சென்னையில் வருகிற 21 மற்றும் 22ம் தேதிகளில் நடக்கிறது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடக்கும் இந்த மாநாட்டை துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைக்கிறார். கமல்ஹாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இதுகுறித்து மாநாட்டு குழுவினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவின் பொழுதுபோக்கு துறை கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய மாற்றத்தை அடைந்துள்ளது. இதில் பிராந்திய மொழிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் தென்னிந்தியாவை மையமாகக் கொண்டு சென்னையில் இந்த மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
திரைப்படம், தொலைக்காட்சி, ஓடிடி, கேமிங், அனிமேஷன் மற்றும் டிஜிட்டல் உள்ளிட்ட பொழுதுபோக்கு துறையின் அனைத்து பிரிவுகளின் எதிர்காலத்தை ஆராய்வதற்கான ஒரு முக்கிய மேடையாக இந்நிகழ்ச்சி அமையும். இத்துறையில் இந்தியாவின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தூண்டுகோலாக இது திகழும்.
இரண்டு நாள் மாநாட்டில் பொழுதுபோக்கு துறையின் பல்வேறு பிரிவுகள் குறித்த அமர்வுகள், கலந்துரையாடல்கள், பட்டறைகள், சந்திப்புகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.