‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருந்தவர் பாலுமகேந்திரா. மூன்றாம் பிறை, மூடுபனி, வீடு, சந்தியாராகம் என தேசிய விருதுபெற்ற படைப்புகளை தந்தவர். அவரது திரைப்படங்கள் பற்றிய கருத்தரங்கம், விவாத அரங்கம் இரண்டு நாட்களாக சென்னை வேல்ஸ் பல்லைகழகத்தில் நடந்தது.
இதன்நிறைவு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, பல்கலைகழக வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ், நடிகை ரோகினி, நிழல்கள் ரவி, ராஜநாயகம் மற்றும் அகிலா பாலு மகேந்திரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைகழக வேந்தர் ஐசரி கணேஷ், 'தொலைநோக்கு திரைப்பட தயாரிப்பாளரின் கலைத்திறனை கவுரவித்தது மற்றும் எதிர்கால தலைமுறை திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இனி ஆண்டு தோறும் இந்த நிகழ்ச்சி நடக்கும். பாலச்சந்தர் , மகேந்திரன் உள்ளிட்ட படைப்பாளிகளுக்கும் இதுபோன்ற கருத்தரங்கு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்" என்றார்.




