ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருந்தவர் பாலுமகேந்திரா. மூன்றாம் பிறை, மூடுபனி, வீடு, சந்தியாராகம் என தேசிய விருதுபெற்ற படைப்புகளை தந்தவர். அவரது திரைப்படங்கள் பற்றிய கருத்தரங்கம், விவாத அரங்கம் இரண்டு நாட்களாக சென்னை வேல்ஸ் பல்லைகழகத்தில் நடந்தது.
இதன்நிறைவு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, பல்கலைகழக வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ், நடிகை ரோகினி, நிழல்கள் ரவி, ராஜநாயகம் மற்றும் அகிலா பாலு மகேந்திரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைகழக வேந்தர் ஐசரி கணேஷ், 'தொலைநோக்கு திரைப்பட தயாரிப்பாளரின் கலைத்திறனை கவுரவித்தது மற்றும் எதிர்கால தலைமுறை திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இனி ஆண்டு தோறும் இந்த நிகழ்ச்சி நடக்கும். பாலச்சந்தர் , மகேந்திரன் உள்ளிட்ட படைப்பாளிகளுக்கும் இதுபோன்ற கருத்தரங்கு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்" என்றார்.




