மணிரத்னம் இயக்கத்தில் நவீன் பொலிஷெட்டி | கமல் சார் படங்களை 30, 40 முறைக்கு மேல பார்த்திருக்கேன் - த்ரிஷா | ராம் கோபால் வர்மாவின் 'சாரி' : 28ம் தேதி வெளியாகிறது | தமிழ் படங்களில் நடிக்க தமிழ் கற்று வரும் கன்னட நடிகை | அரசுகள் தொழில்நுட்ப வளர்ச்சியை கட்டுப்படுத்த கூடாது : கமல்ஹாசன் கோரிக்கை | பிளாஷ்பேக் : எம்ஜிஆர் விழா நடத்தி விருது கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோ | நடிகை வைபவி சாண்டில்யா திருமணம் | 'டிராகன், நி.எ.மே.எ.கோபம்' : முதல் நாள் வசூல் | பிரபுதேவா நிகழ்ச்சி : வருத்தத்துடன் விலகுவதாக சிருஷ்டி டாங்கே அறிவிப்பு |
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருந்தவர் பாலுமகேந்திரா. மூன்றாம் பிறை, மூடுபனி, வீடு, சந்தியாராகம் என தேசிய விருதுபெற்ற படைப்புகளை தந்தவர். அவரது திரைப்படங்கள் பற்றிய கருத்தரங்கம், விவாத அரங்கம் இரண்டு நாட்களாக சென்னை வேல்ஸ் பல்லைகழகத்தில் நடந்தது.
இதன்நிறைவு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, பல்கலைகழக வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ், நடிகை ரோகினி, நிழல்கள் ரவி, ராஜநாயகம் மற்றும் அகிலா பாலு மகேந்திரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைகழக வேந்தர் ஐசரி கணேஷ், 'தொலைநோக்கு திரைப்பட தயாரிப்பாளரின் கலைத்திறனை கவுரவித்தது மற்றும் எதிர்கால தலைமுறை திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இனி ஆண்டு தோறும் இந்த நிகழ்ச்சி நடக்கும். பாலச்சந்தர் , மகேந்திரன் உள்ளிட்ட படைப்பாளிகளுக்கும் இதுபோன்ற கருத்தரங்கு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்" என்றார்.