‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருந்தவர் பாலுமகேந்திரா. மூன்றாம் பிறை, மூடுபனி, வீடு, சந்தியாராகம் என தேசிய விருதுபெற்ற படைப்புகளை தந்தவர். அவரது திரைப்படங்கள் பற்றிய கருத்தரங்கம், விவாத அரங்கம் இரண்டு நாட்களாக சென்னை வேல்ஸ் பல்லைகழகத்தில் நடந்தது.
இதன்நிறைவு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, பல்கலைகழக வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ், நடிகை ரோகினி, நிழல்கள் ரவி, ராஜநாயகம் மற்றும் அகிலா பாலு மகேந்திரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைகழக வேந்தர் ஐசரி கணேஷ், 'தொலைநோக்கு திரைப்பட தயாரிப்பாளரின் கலைத்திறனை கவுரவித்தது மற்றும் எதிர்கால தலைமுறை திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இனி ஆண்டு தோறும் இந்த நிகழ்ச்சி நடக்கும். பாலச்சந்தர் , மகேந்திரன் உள்ளிட்ட படைப்பாளிகளுக்கும் இதுபோன்ற கருத்தரங்கு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்" என்றார்.