பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே… | ராதிகா சரத்குமார் கொடுத்த கிறிஸ்துமஸ் 'லன்ச்' விருந்து | தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்? | நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி | பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுவதா ? நிதி அகர்வால் கமெண்ட் | ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் |

விசு போன்று நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் மவுலி. 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பில் குணசித்ர வேடத்திலும், காமெடி வேடத்திலும் நடித்தார். இயக்கிய படங்கள் அனைத்தும் குடும்ப படங்கள். அவர் கதையின் நாயகனாக நடித்த படம் 'அண்ணே அண்ணே'.
இந்த படத்தையும் அவரே இயக்கி இருந்தார். அவருடன் சுமித்ரா, விஜி, வனிதா, சார்லி, வி.கே.ராமசாமி, லியோ பிரபு உள்பட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார், தேவி பிரசாத் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
கட்டாந்தரையில் படுத்துறங்க துடிக்கும் பணக்காரரும், பஞ்சு மெத்தையில் படுத்துறங்க ஆசைப்படும் ஏழையும் இடம் மாறிக் கொண்டால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் கதை. படம் நாடகம் பார்ப்பது போன்று இருப்பதாக அன்றைக்கு விமர்சனம் எழுந்தது. இளையராஜாவின் பாடல்களும் படத்திற்கு உதவில்லை. படம் தோல்வி அடைந்தது.