கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் |

விசு போன்று நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் மவுலி. 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பில் குணசித்ர வேடத்திலும், காமெடி வேடத்திலும் நடித்தார். இயக்கிய படங்கள் அனைத்தும் குடும்ப படங்கள். அவர் கதையின் நாயகனாக நடித்த படம் 'அண்ணே அண்ணே'.
இந்த படத்தையும் அவரே இயக்கி இருந்தார். அவருடன் சுமித்ரா, விஜி, வனிதா, சார்லி, வி.கே.ராமசாமி, லியோ பிரபு உள்பட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார், தேவி பிரசாத் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
கட்டாந்தரையில் படுத்துறங்க துடிக்கும் பணக்காரரும், பஞ்சு மெத்தையில் படுத்துறங்க ஆசைப்படும் ஏழையும் இடம் மாறிக் கொண்டால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் கதை. படம் நாடகம் பார்ப்பது போன்று இருப்பதாக அன்றைக்கு விமர்சனம் எழுந்தது. இளையராஜாவின் பாடல்களும் படத்திற்கு உதவில்லை. படம் தோல்வி அடைந்தது.