சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
விசு போன்று நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் மவுலி. 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பில் குணசித்ர வேடத்திலும், காமெடி வேடத்திலும் நடித்தார். இயக்கிய படங்கள் அனைத்தும் குடும்ப படங்கள். அவர் கதையின் நாயகனாக நடித்த படம் 'அண்ணே அண்ணே'.
இந்த படத்தையும் அவரே இயக்கி இருந்தார். அவருடன் சுமித்ரா, விஜி, வனிதா, சார்லி, வி.கே.ராமசாமி, லியோ பிரபு உள்பட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார், தேவி பிரசாத் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
கட்டாந்தரையில் படுத்துறங்க துடிக்கும் பணக்காரரும், பஞ்சு மெத்தையில் படுத்துறங்க ஆசைப்படும் ஏழையும் இடம் மாறிக் கொண்டால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் கதை. படம் நாடகம் பார்ப்பது போன்று இருப்பதாக அன்றைக்கு விமர்சனம் எழுந்தது. இளையராஜாவின் பாடல்களும் படத்திற்கு உதவில்லை. படம் தோல்வி அடைந்தது.