Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : பர்மா அகதிகளின் கதை

15 பிப், 2025 - 12:55 IST
எழுத்தின் அளவு:
The-story-of-the-flashback-Burma-refugees

இலங்கையில் உள்நாட்டு போர் நடந்த காலத்தில் அங்கிருந்து வந்த அகதிகள் பற்றிய பல படங்கள் வெளிவந்திருக்கிறது. அவர்களுக்கு தனிமுகாம் அமைத்துக் கொடுத்து இன்று வரை அரசு பாதுகாத்து வருதுகிறது. இதே மாதிரி இரண்டாம் உலகப்போர் நடந்தபோது பர்மாவில் இருந்து இந்தியா வந்த அகதிகளை பற்றி முதன் முதலில் பேசிய படம் 'மானஸம்ரக்ஷணம்'.

தமிழர்கள் உலகம் முழுக்க சென்று தங்கள் உழைப்பால் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவி அங்கேயே செட்டிலாகி இருக்கிறார்கள். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என இந்த பட்டியல் நீளமானது. அந்த வரிசையில் தமிழர்கள் பர்மாவிலும் குடியேறி அந்த நாட்டுக்காக உழைத்து அங்கேயே செட்டிலானார்கள்.

இரண்டாம் உலகப்போர் நடந்த போது ஜப்பான் பர்மாவை கைப்பற்றியது. இந்தியாவுக்கு எதிர் அணியில் இருந்த ஜப்பான் பர்மாவில் வாழும் இந்தியர்களை குறிப்பக தமிழர்களை நாட்டை விட்டு விரட்டி அடித்தது. இதனால் தமிழர்கள் காடு, மலைகளை கடந்து பின்னர் மறைமுகமாக கடல் கடந்து இந்தியா வந்தார்கள். இந்த அகதிகளின் பயணத்தை மையமாக வைத்து உருவானதுதான் இந்த படம்.

இந்த பயணத்தின் போது படத்தின் நாயகி எஸ்.டி.சுப்புலட்சுமி, கொடுமையான பயணத்தில் பெரியவர்கள் கொல்லப்பட்டு விடக்கூடும். இதனால் நம் சந்ததிகளாவது தாய் நாடு திரும்ப வேண்டும் என்று நினைத்து 'மானஸம்ரக்ஷணம்' என்ற அமைப்பை தொடங்குகிறார். எல்லோருடைய குழந்தைகளையும் தாய்நாட்டில் கொண்டு சேர்க்கும் பொறுப்பை இந்த அமைப்பு ஏற்கிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை.

இதில் எஸ்.டி.சுப்புலட்சுமியுடன், ஜி.பட்டு அய்யர், வி.என்.ஜானகி, டி.ஆர்.ராமச்சந்திரன், காளி என்.ரத்னம், டி.கே.சம்பங்கி, எம்.ஆர்.எஸ்.மணி, டி.ஆர்.பி.ராவ், எம்.ஏ.கணபதி பட், வி.எஸ்.சந்தானம் அய்யங்கார், ஆர்.ராமானுஜா சாரியார், ச.ராமானுஜா சாரியார், சலட்சுமி, சலட்சுமி, வி.ஏ. 'குமாரி' சுப்புலட்சுமி ஆகியோர் நடித்திருந்தார்கள்.

கே.சுப்பிரமணியம் இயக்கி இருந்தார். தியாகராஜன் இசை அமைத்திருந்தார், தாம்பு ஒளிப்பதிவு செய்திருந்தார். பின்னாளில் 2015ம் ஆண்டில் தனுஷ் நடித்த 'அனேகன்' படம் பர்மா தமிழர்களை மையமாக கொண்டு வெளியானது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'டிராகான் Vs நி.எ.மே.எ.கோபம்' - இளைஞர்களைக் கவரப் போவது யார்?'டிராகான் Vs நி.எ.மே.எ.கோபம்' - ... பிளாஷ்பேக் : கதை நாயகனாக நடித்த மவுலி பிளாஷ்பேக் : கதை நாயகனாக நடித்த மவுலி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in