திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் |

இலங்கையில் உள்நாட்டு போர் நடந்த காலத்தில் அங்கிருந்து வந்த அகதிகள் பற்றிய பல படங்கள் வெளிவந்திருக்கிறது. அவர்களுக்கு தனிமுகாம் அமைத்துக் கொடுத்து இன்று வரை அரசு பாதுகாத்து வருதுகிறது. இதே மாதிரி இரண்டாம் உலகப்போர் நடந்தபோது பர்மாவில் இருந்து இந்தியா வந்த அகதிகளை பற்றி முதன் முதலில் பேசிய படம் 'மானஸம்ரக்ஷணம்'.
தமிழர்கள் உலகம் முழுக்க சென்று தங்கள் உழைப்பால் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவி அங்கேயே செட்டிலாகி இருக்கிறார்கள். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என இந்த பட்டியல் நீளமானது. அந்த வரிசையில் தமிழர்கள் பர்மாவிலும் குடியேறி அந்த நாட்டுக்காக உழைத்து அங்கேயே செட்டிலானார்கள்.
இரண்டாம் உலகப்போர் நடந்த போது ஜப்பான் பர்மாவை கைப்பற்றியது. இந்தியாவுக்கு எதிர் அணியில் இருந்த ஜப்பான் பர்மாவில் வாழும் இந்தியர்களை குறிப்பக தமிழர்களை நாட்டை விட்டு விரட்டி அடித்தது. இதனால் தமிழர்கள் காடு, மலைகளை கடந்து பின்னர் மறைமுகமாக கடல் கடந்து இந்தியா வந்தார்கள். இந்த அகதிகளின் பயணத்தை மையமாக வைத்து உருவானதுதான் இந்த படம்.
இந்த பயணத்தின் போது படத்தின் நாயகி எஸ்.டி.சுப்புலட்சுமி, கொடுமையான பயணத்தில் பெரியவர்கள் கொல்லப்பட்டு விடக்கூடும். இதனால் நம் சந்ததிகளாவது தாய் நாடு திரும்ப வேண்டும் என்று நினைத்து 'மானஸம்ரக்ஷணம்' என்ற அமைப்பை தொடங்குகிறார். எல்லோருடைய குழந்தைகளையும் தாய்நாட்டில் கொண்டு சேர்க்கும் பொறுப்பை இந்த அமைப்பு ஏற்கிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை.
இதில் எஸ்.டி.சுப்புலட்சுமியுடன், ஜி.பட்டு அய்யர், வி.என்.ஜானகி, டி.ஆர்.ராமச்சந்திரன், காளி என்.ரத்னம், டி.கே.சம்பங்கி, எம்.ஆர்.எஸ்.மணி, டி.ஆர்.பி.ராவ், எம்.ஏ.கணபதி பட், வி.எஸ்.சந்தானம் அய்யங்கார், ஆர்.ராமானுஜா சாரியார், ச.ராமானுஜா சாரியார், சலட்சுமி, சலட்சுமி, வி.ஏ. 'குமாரி' சுப்புலட்சுமி ஆகியோர் நடித்திருந்தார்கள்.
கே.சுப்பிரமணியம் இயக்கி இருந்தார். தியாகராஜன் இசை அமைத்திருந்தார், தாம்பு ஒளிப்பதிவு செய்திருந்தார். பின்னாளில் 2015ம் ஆண்டில் தனுஷ் நடித்த 'அனேகன்' படம் பர்மா தமிழர்களை மையமாக கொண்டு வெளியானது.