கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? | கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் |

கடந்த வருடம் மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் 'ஆவேசம்' என்கிற திரைப்படம் வெளியானது. இயக்குனர் ஜித்து மாதவன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். ரங்கன் தாதா என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் பஹத் பாசில் நடித்திருந்தார். முழுக்க முழுக்க காமெடி கலந்த ஒரு கேங்ஸ்டர் படமாக வித்தியாசமான கதை சொல்லலில் இது உருவாகி இருந்தது.
மலையாளத்தையும் தாண்டி தமிழிலும் இந்த படம் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்ல ஹிந்தியிலும் இந்த படம் ரீமேக் ஆக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் இருக்கிறது என்று இந்த படத்தில் பஹத் பாசிலின் வலது கையாக முக்கிய வேடத்தில் நடித்திருந்த சஜின் கோபு என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இவர் தற்போது பஷில் ஜோசப் கதையின் நாயகனாக நடித்து வெளியாகி உள்ள 'பொன் மேன்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தான், ஆவேசம் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதை வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று கூறியுள்ளார். அதே சமயம் ஆவேசம் பட இயக்குனர் ஜித்து மாதவன் அடுத்ததாக மோகன்லாலை வைத்து படம் இயக்க ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தை முடித்துவிட்டு ஒருவேளை ஆவேசம் இரண்டாம் பாகத்தை கையில் எடுக்கலாம் என்று தெரிகிறது.