நேரடியாக ஓடிடியில் ‛டெஸ்ட்' ரிலீஸாவதாக அறிவிப்பு - டீசர் வெளியானது | தனுஷ் படம் குறித்த கமெண்ட் சும்மா ஒரு தமாஷுக்காக சொன்னது ; கவுதம் மேனன் | 'எம்புரான்' படத்துக்காக 'தொடரும்' பட ரிலீஸை தள்ளிவைத்த மோகன்லால் | இரண்டாம் பாகம் இருக்கு ; ஆவேசம் நடிகர் சொன்ன அப்டேட் | ''எனக்கு மேனேஜரே இல்லை'': சந்தீப் வங்காவுக்கு சாய் பல்லவி பதில் | மலையாளத்தில் தொடர்ந்து பயணிக்க கவுதம் மேனன் முடிவு ; மோகன்லால், பிரித்விராஜூடன் பேச்சு | சினிமா ஹீரோயின் ஆனார் ஆயிஷா | அதிகாலை காட்சிகள் இல்லாமல் வெளியாகும் 'தண்டேல்' | பிளாஷ்பேக்: மதுவின் தீமையை விளக்கிய முதல் படத்தை துவக்கி வைத்த எம்ஜிஆர் | பிளாஷ்பேக் : நெருக்கமான காட்சிகளால் விமர்சனத்தையும், வெற்றியையும் பெற்ற படம் |
கடந்த வருடம் மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் 'ஆவேசம்' என்கிற திரைப்படம் வெளியானது. இயக்குனர் ஜித்து மாதவன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். ரங்கன் தாதா என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் பஹத் பாசில் நடித்திருந்தார். முழுக்க முழுக்க காமெடி கலந்த ஒரு கேங்ஸ்டர் படமாக வித்தியாசமான கதை சொல்லலில் இது உருவாகி இருந்தது.
மலையாளத்தையும் தாண்டி தமிழிலும் இந்த படம் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்ல ஹிந்தியிலும் இந்த படம் ரீமேக் ஆக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் இருக்கிறது என்று இந்த படத்தில் பஹத் பாசிலின் வலது கையாக முக்கிய வேடத்தில் நடித்திருந்த சஜின் கோபு என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இவர் தற்போது பஷில் ஜோசப் கதையின் நாயகனாக நடித்து வெளியாகி உள்ள 'பொன் மேன்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தான், ஆவேசம் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதை வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று கூறியுள்ளார். அதே சமயம் ஆவேசம் பட இயக்குனர் ஜித்து மாதவன் அடுத்ததாக மோகன்லாலை வைத்து படம் இயக்க ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தை முடித்துவிட்டு ஒருவேளை ஆவேசம் இரண்டாம் பாகத்தை கையில் எடுக்கலாம் என்று தெரிகிறது.