சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

கடந்த வருடம் மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் 'ஆவேசம்' என்கிற திரைப்படம் வெளியானது. இயக்குனர் ஜித்து மாதவன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். ரங்கன் தாதா என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் பஹத் பாசில் நடித்திருந்தார். முழுக்க முழுக்க காமெடி கலந்த ஒரு கேங்ஸ்டர் படமாக வித்தியாசமான கதை சொல்லலில் இது உருவாகி இருந்தது.
மலையாளத்தையும் தாண்டி தமிழிலும் இந்த படம் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்ல ஹிந்தியிலும் இந்த படம் ரீமேக் ஆக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் இருக்கிறது என்று இந்த படத்தில் பஹத் பாசிலின் வலது கையாக முக்கிய வேடத்தில் நடித்திருந்த சஜின் கோபு என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இவர் தற்போது பஷில் ஜோசப் கதையின் நாயகனாக நடித்து வெளியாகி உள்ள 'பொன் மேன்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தான், ஆவேசம் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதை வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று கூறியுள்ளார். அதே சமயம் ஆவேசம் பட இயக்குனர் ஜித்து மாதவன் அடுத்ததாக மோகன்லாலை வைத்து படம் இயக்க ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தை முடித்துவிட்டு ஒருவேளை ஆவேசம் இரண்டாம் பாகத்தை கையில் எடுக்கலாம் என்று தெரிகிறது.




