தக்லைப் படத்தின் 'விண்வெளி நாயகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது! | நான் சந்தோஷத்தை வெளியில் தேடியது கிடையாது! - 'குபேரா' பட விழாவில் தனுஷ் பேச்சு | தோழிகள் படைசூழ தாய்லாந்து நாட்டிற்கு டூர் சென்ற கவுரி கிஷன்! | அந்தமான் செல்லும் சாய் தன்சிகா: ஏன் தெரியுமா? | பட விழாவுக்கு வரமுடியாததால் வீடியோகாலில் பேசிய யோகிபாபு | தமிழகத்திலும் அந்த படங்கள் வரும்: கஸ்துாரி கணிப்பு | தம்பிகளா, தள்ளிப்போய் விளையாடுங்க: தனுஷ் ஆவேசம் | பிறந்தநாளன்று இளையராஜா சொன்ன இனிப்பான செய்தி | 'தக் லைப்' படத்திற்கு கர்நாடகாவில் தடை: வழக்கு தொடர்ந்த கமல்ஹாசன் | விஜய் மில்டன் படத்தில் இணைந்த பரத் |
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக இருக்கும் வினோதினி, ஒன்றைரை வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் தற்போது திடீரென கட்சியை விட்டு விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், 'தொடர்ந்து என் எண்ணமும் சிந்தனையும் தமிழ்நாட்டு அரசியலை மையப்படுத்தியே இருக்கும். ஏனெனில், நான் பிறந்த இம்மண்ணுக்கு என் மக்களுக்கு என்னால் ஆன சிறு மாற்றத்தையாவது, குறைந்தபட்சம் சிந்தனையளிவிலாவது, இப்பிறவியில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் நோக்கம்' எனப் பதிவிட்டு விலகலை அறிவித்தார்.
இந்த நிலையில், மநீம கட்சியில் இருந்து விலகியது தொடர்பாக நமது தினமலருக்கு வினோதினி அளித்த விளக்கம்: கட்சியில் இருந்து விலகியது நன்றாக யோசித்தே பிறகு எடுத்த முடிவு. எடுத்தோம் கவிழ்த்தோம் என நான் எதுவும் செய்வதில்லை. சில நாட்களாக எனக்குள் உறுத்தல், குற்ற உணர்வு இருந்தது. கட்சியில் எனது பயணம் பற்றி 2, 3 விஷயங்களில் அறிவுறுத்தினர். தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில் இருக்கும்போது, ஆட்சி அதிகாரத்தில் இல்லாத ஒரு கட்சி, எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும். ஆனால், மநீம ஆளும்கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறது. அப்படியிருக்கையில் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். அப்படியான வேலையில் நான் ஈடுபட்டிருந்தேன்.
ஆனாலும், எனக்கு நேரம் கிடைக்கவில்லை. மேலும், சினிமாவில் முன்னணி இடத்தில் இல்லாததால் பல படங்களில் நடித்தால் தான் கொஞ்சம் ஊதியம் பெற முடியும். கட்சியில் இருந்து விலகல் தொடர்பாக கமல்ஹாசனிடம் பேசவில்லை, எக்ஸ் தளத்தில் மட்டுமே தெரிவித்தேன். கட்சியில் இருந்து சிலர் தொடர்புகொண்டு, சில விஷயங்கள் பற்றி பேசிக்கொள்ளலாம் எனக்கூறினர். கட்சியில் இருப்பவர்கள் யாரும் எதிரி அல்ல, அனைவரும் ஒன்றாக தான் இருக்கிறோம்.
கட்சியில் இருந்து 2, 3 விஷயங்களில் பொறுப்பேற்க சொன்னார்கள். ஆனால் என்னால் அதனை முன்னெடுக்க முடியவில்லை. கட்சியில் இருக்கும் அணிகளில் எதை வேண்டுமானாலும் எடுத்து வலுப்படுத்தி இருக்கலாம். ஆனால் என்னால் அதில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. நேரம் இல்லை என்பதால் தான் நான் மநீம.,வை விட்டு வெளியேறினேன். அப்படியிருக்கையில் இப்போதைக்கு எந்த கட்சியிலும் சேரப்போவதில்லை. இவ்வாறு அவர் விளக்கமளித்துள்ளார்.