ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். திருமண வாழ்க்கை முறிவிற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து வந்தார் சமந்தா. இதற்கு அவரின் உடல்நிலையும் ஒரு காரணம். அவருக்கு ஏற்பட்ட தசை அழற்சி பிரச்னையால் சில காலம் சிகிச்சையில் இருந்தார். இருப்பினும் கதையின் நாயகியாக யசோதா, சாகுந்தலம் போன்ற படங்களிலும், சிட்டாடல் போன்ற வெப்சீரிஸிலும் நடித்தார். தற்போது படம் மற்றும் வெப்சீரிஸில் நடிக்கிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட சமந்தா கூறியதாவது, "தொடர்ந்து படங்களில் நடிப்பது சுலபம். ஆனால் நான் எனது ஒவ்வொரு படத்தையும் கடைசி படம் போல் நடிக்க விரும்புகிறேன். இனிமேல் சவாலான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பேன். ஒரு படத்தை தேர்ந்தெடுத்துக்கும் போது பலவிதமாக யோசித்து முடிவெடுக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.