30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு |
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். திருமண வாழ்க்கை முறிவிற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து வந்தார் சமந்தா. இதற்கு அவரின் உடல்நிலையும் ஒரு காரணம். அவருக்கு ஏற்பட்ட தசை அழற்சி பிரச்னையால் சில காலம் சிகிச்சையில் இருந்தார். இருப்பினும் கதையின் நாயகியாக யசோதா, சாகுந்தலம் போன்ற படங்களிலும், சிட்டாடல் போன்ற வெப்சீரிஸிலும் நடித்தார். தற்போது படம் மற்றும் வெப்சீரிஸில் நடிக்கிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட சமந்தா கூறியதாவது, "தொடர்ந்து படங்களில் நடிப்பது சுலபம். ஆனால் நான் எனது ஒவ்வொரு படத்தையும் கடைசி படம் போல் நடிக்க விரும்புகிறேன். இனிமேல் சவாலான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பேன். ஒரு படத்தை தேர்ந்தெடுத்துக்கும் போது பலவிதமாக யோசித்து முடிவெடுக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.