சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு | நிஜ வாழ்க்கையில் நடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை! : சொல்கிறார் பார்வதி | நாகசைதன்யா 24வது படத்தில் மீனாட்சி சவுத்ரி முதல் பார்வை வெளியீடு | மீண்டும் ஒரு அதிரடி, மாஸ் என்டர்டெயின் படம் : விஷால் | ஜாய் கிரிசில்டா உடன் திருமணம், குழந்தை : ஒப்புக் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ் | 2025... 10 மாதங்கள், 222 படங்கள் : வெற்றிப் படங்கள் 12 மட்டுமே… | சாமியாரான பாலிவுட் நடிகை |

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி மற்றும் பலர் நடித்த 'கேம் சேஞ்ஜர்' படம் பொங்கலை முன்னிட்டு வெளிவந்தது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் தோல்வியில் முடிந்தது. இப்படத்திற்கான பல நெகட்டிவ் பரப்புரைகள் செய்யப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்நிலையில் தெலுங்கில் இந்த வாரம் வெளியாக உள்ள 'மத கஜ ராஜா' படத்திற்கான நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அஞ்சலியிடம் 'கேம் சேஞ்ஜர்' படத்தின் தோல்வி குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அஞ்சலி, “கேம் சேஞ்ஜர்' படம் பற்றி பேச வேண்டுமென்றால் அதற்காக தனியாக பேட்டி ஒன்றை நடத்த வேண்டும். எல்லாருக்கும் அதற்கான காரணம் தெரியும். சில படங்களுக்கு நடிகர்கள், நடிகைகள் தனியாகச் செய்வார்கள். கேம் சேஞ்ஜர் எனக்கு அந்த மாதிரியான ஒரு படம். பலரும் எனது நடிப்பு குறித்து பாராட்டினார்கள். அதுவே எனக்குப் போதுமானது. மற்ற விஷயங்கள் பற்றி பேச வேண்டுமானால் அரை மணி நேரமோ, முக்கால் மணி நேரமோ தனியாகப் பேச வேண்டும்,” என்றார்.
'கேம் சேஞ்ஜர்' படம் அதன் பட்ஜெட்டில் பாதியளவு மட்டுமே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.