துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா |

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் டிசம்பர் 5ம் தேதி பான் இந்தியா படமாக வெளியான படம் 'புஷ்பா 2'. 1800 கோடிக்கும் அதிமாக வசூலித்த இந்தப் படத்தின் ஓடிடி வெளியீட்டை 60 நாட்களுக்குப் பிறகே செய்வோம் என தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் இந்தப் படத்தை விரைவில் வெளியிடுகிறோம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நாளை அல்லது நாளை மறுநாள் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஹிந்தி வெளியீடு குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
தியேட்டர்களில் முதலில் வெளியான 3 மணி நேரம் 20 நிமிடப் படத்தை வெளியிடாமல் பின்னர் சேர்க்கப்பட்ட கூடுதலான 20 நிமிடத்தையும் சேர்த்து 3 மணி நேர 40 நிமிடப் படமாக ஓடிடியில் வெளியிட உள்ளார்கள்.
இப்படத்தின் அனைத்து மொழி ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 275 கோடி கொடுத்து வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்திய ஓடிடி வரலாற்றில் இந்தப் படம் புதிய சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.