ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பெரும்பாலும் நடிகைகளைப்பொறுத்தவரை 15 வயதிலேயே நடிக்க வந்து விடுகிறார்கள். அதனால் அவர்களது படிப்பு பத்தாம் வகுப்போடு கட்டாகி விடுகிறது. அப்படி படிப்பை பாதியில் விட்ட பத்மப்பிரியா இப்போது வெளிநாடு சென்று படிப்பை தொடர்ந்து வருகிறார். அதேபோல் மேக்னாராஜ், பெங்களூரில் பாதியில் விட்ட படிபபை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
ஆனால், பூ படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த பார்வதி அந்த படத்தில் நடிக்கும்போதும் சரி, நடித்து முடித்தபிறகும் சரி இன்னமும் படித்துக்கொண்டுதான் இருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், எங்கள் ஊரான கேரளாவில் படிப்புக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால் நானும் நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறேன். அதனால்தான், சினிமாவில் நடிக்க வந்த பிறகும் நான் படிப்பை விடவில்லை. இப்போது மரியான் படத்துக்குபிறகும்கூட எனது படிப்பு தொடர்கிறது. புதிதாக படங்கள் கமிட்டானால்கூட படிப்புக்கு இடையூறு ஏற்படாத வகையில்தான் கால்சீட் கொடுப்பேன் என்று சொல்லும் பார்வதி, என்னைப்பொறுத்தவரை எப்போதுமே படிப்புக்குத்தான் முதலிடம் கொடுப்பேன். சினிமா என்பது எனக்கு இரண்டாம்பட்சம்தான் என்கிறார்.