ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் |

நடிகர் விஜய் தனது 69வது படத்தோடு நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். இந்தநிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷாவும் விரைவில் நடிப்புக்கு முழுக்கு போடப்போவதாக தகவல் உலா வருகிறது.
தற்போது தமிழில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக்லைப் போன்ற படங்களில் நடித்துள்ள திரிஷா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45 வது படத்தில் நடித்து வருகிறார். அதோடு, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் கைவசம் உள்ள படங்களோடு நடிப்புக்கு அவர் முழுக்குப் போடப்போவதாகவும், சினிமாவை விட்டு வெளியேறும் த்ரிஷா, விஜய்யுடன் இணைந்து அரசியலில் பயணிக்க திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதுபற்றி விசாரிக்க த்ரிஷாவின் அம்மா உமாவை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர் கூறுகையில், ‛‛அந்த செய்தி உண்மையல்ல, தொடர்ந்து த்ரிஷா நடிப்பார்'' என்றார்.




