ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

நடிகர் விஜய் தனது 69வது படத்தோடு நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். இந்தநிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷாவும் விரைவில் நடிப்புக்கு முழுக்கு போடப்போவதாக தகவல் உலா வருகிறது.
தற்போது தமிழில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக்லைப் போன்ற படங்களில் நடித்துள்ள திரிஷா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45 வது படத்தில் நடித்து வருகிறார். அதோடு, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் கைவசம் உள்ள படங்களோடு நடிப்புக்கு அவர் முழுக்குப் போடப்போவதாகவும், சினிமாவை விட்டு வெளியேறும் த்ரிஷா, விஜய்யுடன் இணைந்து அரசியலில் பயணிக்க திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதுபற்றி விசாரிக்க த்ரிஷாவின் அம்மா உமாவை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர் கூறுகையில், ‛‛அந்த செய்தி உண்மையல்ல, தொடர்ந்து த்ரிஷா நடிப்பார்'' என்றார்.