இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா | நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி | 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு | 'நீளிரா' பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் : 'எமகாதகி' புகழ் ரூபா | துரந்தர் காட்சி : மன்னிப்பு கேட்ட மாதவன் |

ஹிந்தி படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக தேவரா என்ற படத்தில் அறிமுகமானார். அதையடுத்து தற்போது ராம்சரண் நடிக்கும் 16வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்நிலையில், ஹிந்தி இயக்குனர் கரண் ஜோகரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜான்வி கபூரிடம் திருமணம் குறித்த கேள்வி எழுந்தது.
அதற்கு ஜான்வி, திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்திருக்கிறார். அதோடு மூன்று குழந்தைகளை பெற்றெடுத்து கணவர் மற்றும் பிள்ளைகளுடன் திருப்பதியில் குடியேற வேண்டும். குடும்பத்தாருடன் அங்கு நேரத்தை செலவிட விரும்புவதாகவும், வாழை இலையில் சாப்பிட்டு கோவிந்தா கோவிந்தா என சொல்ல வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
ஜான்வி கபூர் தனது தந்தை மற்றும் தங்கையுடன் அவ்வப்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.