புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ஹிந்தி படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக தேவரா என்ற படத்தில் அறிமுகமானார். அதையடுத்து தற்போது ராம்சரண் நடிக்கும் 16வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்நிலையில், ஹிந்தி இயக்குனர் கரண் ஜோகரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜான்வி கபூரிடம் திருமணம் குறித்த கேள்வி எழுந்தது.
அதற்கு ஜான்வி, திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்திருக்கிறார். அதோடு மூன்று குழந்தைகளை பெற்றெடுத்து கணவர் மற்றும் பிள்ளைகளுடன் திருப்பதியில் குடியேற வேண்டும். குடும்பத்தாருடன் அங்கு நேரத்தை செலவிட விரும்புவதாகவும், வாழை இலையில் சாப்பிட்டு கோவிந்தா கோவிந்தா என சொல்ல வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
ஜான்வி கபூர் தனது தந்தை மற்றும் தங்கையுடன் அவ்வப்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.