பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகி சுமார் 1200 கோடி வசூலித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதை எழுதும் வேலைகளை படத்தின் இயக்குனர் நாக் அஷ்வின் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டாராம்.
ஜுன் மாதம் முதல் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக தயாரிப்பாளர் அஷ்வினி தத் சமீபத்தில் தெரிவித்துள்ளார். அதற்காக பிரபாஸ் ஏற்கெனவே தேதிகளைக் கொடுத்துவிட்டாராம். அமிதாப், கமல் உள்ளிட்டவர்களிடமும் தேதிகளைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
இரண்டாம் பாகத்தை 2027ம் ஆண்டுதான் வெளியிட உள்ளார்களாம். முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தில் விஎப்எக்ஸ் வேலைகள் அதிகம் இருப்பதால் அதை முடிக்க பல மாதங்கள் ஆகும் என்பதே அதற்குக் காரணம்.