பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து கடந்த வாரம் வெளிவந்த தெலுங்குப் படம் 'கேம் சேஞ்ஜர்'. இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். தமன் இசையமைத்த மற்றொரு படமான 'டாகு மகாராஜ்' படத்தின் சக்சஸ் மீட் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் தமன், “இப்போது ஒரு தயாரிப்பாளர் அவருடைய படத்தின் வெற்றியைக் கூட தனதாக்கிக் கொள்ள முடியவில்லை. தெலுங்கு சினிமா தற்போது நல்ல நிலையில் ஜொலிக்கிறது. மற்ற மொழிகளிலிருந்து பலரும் இங்கு வந்து பணி புரிய வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால், இங்கு நாமோ படங்களைக் கொன்று கொண்டிருக்கிறோம். நீங்கள் உங்களது ரசிக சண்டைகளை போட்டுக் கொள்ளுங்கள். ஆனால், அதே சமயம் நமது தயாரிப்பாளரைரையும், சினிமாவையும் நாம் பொறுப்புடன் மதிக்க வேண்டும். டிரோல்ஸ், நெகட்டிவ் டேக்ஸ், டிரென்ட்ஸ் ஆகியவற்றால் இப்போது எரிச்சல்தான் வருகிறது,” என்று பேசியிருந்தார்.
'கேம் சேஞ்ஜர்' படம் முதல் நாளிலேயே 186 கோடி வசூலைப் பெற்றது என்ற அறிவிப்பு தெலுங்கு ரசிகர்களிடம் பலமாகக் கிண்டலடிக்கப்பட்டது. அதன்பின் கடந்த ஒரு வாரமாக அப்படத்தின் வசூல் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
தமனின் பேச்சுக்கு தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரும், ராம் சரணின் அப்பாவுமான சிரஞ்சீவி ஆதரவு அளித்து பதிவு ஒன்றைப் போட்டுள்ளார்.
அதில், “நேற்று நீங்கள் பேசிய வார்த்தைகள் மனதைத் தொட்டன. எப்போதும் ஜாலியாகப் பேசிக் கொண்டிருக்கும் உங்களுக்கு இப்படியொரு வலி இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், நீங்கள் எவ்வளவு வருத்தப்படுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக எதிர்வினை ஆற்றுகிறீர்கள் என்று தோன்றியது. படமாக இருந்தாலும் சரி, கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அவர்களின் வார்த்தைகளின் தாக்கத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். வார்த்தைகள் ஊக்குவிக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நாம் நேர்மறையாக இருந்தால் அந்த ஆற்றல் நம் வாழ்க்கைகையை நேர்மறையாக வழி நடத்தும்,” என்று பதிவிட்டுள்ளார்.