லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

'மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ' படங்களை அடுத்து தற்போது ரஜினி நடிப்பில் 'கூலி' என்ற படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். ரஜினியுடன் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நட்புக்காக பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது தாய்லாந்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அடுத்தபடியாக 'கைதி-2' படத்தை இயக்க திட்டமிட்டுள்ள லோகேஷ் கனகராஜிடத்தில், கமல், ரஜினி, விஜய்யை வைத்து படம் எடுத்துவிட்ட நீங்கள், அஜித்தை வைத்து எப்போது படம் எடுப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பியதற்கு, ''அஜித் சாரை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாகவே மனதளவில் இருந்து வருகிறது. விரைவில் அதற்கான முயற்சி எடுப்பேன். கூடிய சீக்கிரமே என்னுடைய அந்த ஆசை நிறைவேறும் என்று நினைக்கிறேன்'' என்கிறார் லோகேஷ் கனகராஜ்.