ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் |
'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராம்சரண் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் படம் 'கேம் சேஞ்ஜர்'. சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜனவரி 10ம் தேதி) இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படம் குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் ராம்சரண். அதன் ஒரு பகுதியாக பிரபல நடிகர் பாலகிருஷ்ணா நடத்தும் டிவி ஷோவான அன்ஸ்டாப்பபிள் என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ராம்சரண். அப்போது அவரிடம் நீங்கள் இந்த படத்தில் நடித்திருக்க வேண்டாமே என்று எந்த படத்திலாவது நடித்ததற்காவது வருத்தப்படுகிறீர்களா என்று பாலகிருஷ்ணா கேட்டபோது அதற்கு சற்றும் தயங்காமல் ''ஜஞ்சீர் படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன்'' என்று கூறினார் ராம்சரண்.
அப்படி ராம்சரண் கூறிய ஜஞ்சீர் திரைப்படம் கடந்த 2013ல் ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிப்படமாக உருவானது. ஹிந்தியில் 'ஜஞ்சீர்' என்றும் தெலுங்கில் 'தூபான்' என்கிற பெயரில் இது வெளியானது. பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடித்திருந்தார். ஹிந்தியில் ராம்சரண் நடித்த முதல் படமாக இது அமைந்தது. ஆனால் இந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. அதற்கு முக்கிய காரணம் இந்த படம் 1973ல் அதாவது கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்பு அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான ஜஞ்சீர் என்கிற படத்தை ரீமேக் செய்து உருவாக்கப்பட்டது.
அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் தான் ராம்சரண் நடித்திருந்தார். தற்போதைய காலத்திற்கும் அதேசமயம் ராம்சரணுக்கும் ஏற்ற கதையாக இல்லாததால் இந்த படம் தோல்வியை தழுவியது. அதனால் இந்த படத்திலும் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்க வேண்டாமே எனத் தான் வருத்தப்பட்டதாக கூறியுள்ளார் ராம்சரண்.