விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராம்சரண் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் படம் 'கேம் சேஞ்ஜர்'. சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜனவரி 10ம் தேதி) இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படம் குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் ராம்சரண். அதன் ஒரு பகுதியாக பிரபல நடிகர் பாலகிருஷ்ணா நடத்தும் டிவி ஷோவான அன்ஸ்டாப்பபிள் என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ராம்சரண். அப்போது அவரிடம் நீங்கள் இந்த படத்தில் நடித்திருக்க வேண்டாமே என்று எந்த படத்திலாவது நடித்ததற்காவது வருத்தப்படுகிறீர்களா என்று பாலகிருஷ்ணா கேட்டபோது அதற்கு சற்றும் தயங்காமல் ''ஜஞ்சீர் படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன்'' என்று கூறினார் ராம்சரண்.
அப்படி ராம்சரண் கூறிய ஜஞ்சீர் திரைப்படம் கடந்த 2013ல் ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிப்படமாக உருவானது. ஹிந்தியில் 'ஜஞ்சீர்' என்றும் தெலுங்கில் 'தூபான்' என்கிற பெயரில் இது வெளியானது. பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடித்திருந்தார். ஹிந்தியில் ராம்சரண் நடித்த முதல் படமாக இது அமைந்தது. ஆனால் இந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. அதற்கு முக்கிய காரணம் இந்த படம் 1973ல் அதாவது கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்பு அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான ஜஞ்சீர் என்கிற படத்தை ரீமேக் செய்து உருவாக்கப்பட்டது.
அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் தான் ராம்சரண் நடித்திருந்தார். தற்போதைய காலத்திற்கும் அதேசமயம் ராம்சரணுக்கும் ஏற்ற கதையாக இல்லாததால் இந்த படம் தோல்வியை தழுவியது. அதனால் இந்த படத்திலும் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்க வேண்டாமே எனத் தான் வருத்தப்பட்டதாக கூறியுள்ளார் ராம்சரண்.