நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

வேட்டையன் படத்திற்கு பின் நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‛கூலி' படத்தில் நடித்து வருகிறார். அவருடன் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடக்கிறது. அதற்காக ரஜினிகாந்த் இன்று (ஜன.7) சென்னையில் இருந்து தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார்.
சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது : கூலி படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் வரை முடிந்துவிட்டது. அடுத்த படப்பிடிப்பு ஜன 13ல் முதல் 25 வரை நடக்கிறது என்றார்.
அப்போது நிருபர்களில் ஒருவர், அரசியல் தொடர்பான கேள்வி ஒன்றை கேட்க முனைந்தார். இதனால் டென்ஷனான ரஜினி, ‛அரசியல் பற்றி கேள்வி கேட்க வேண்டாம் என்று நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். ஓகே, தேங்க்யூ' என்று கூறிவிட்டு நகர்ந்து சென்றார்.