கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
ஹனிப் அடேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன், சித்திக், ஜெகதீஷ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் 20ம் தேதி வெளிவந்த மலையாளப் படம் 'மார்க்கோ'. இப்படத்தில் அதிகமான வன்முறைக் காட்சிகள் இருந்ததால் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது. மலையாளத் திரையுலகில் அதிக வசூலைக் குவித்த 'ஏ' சான்றிதழ் பெற்ற ஒரு திரைப்படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது.
தற்போது படம் 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வட இந்திய மாநிலங்கள், தெலுங்கு மாநிலங்களிலும் இப்படம் வெளியாகி குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றுள்ளது.
மலையாளத்தில் 100 கோடி வசூலைக் கடந்த 9வது படமாக இந்தப் படம் சாதனை புரிந்துள்ளது. 'மஞ்சும்மேல் பாய்ஸ்' அதிகபட்சமாக 240 கோடியை வசூலித்துள்ளது. “2018, தி கோட் லைப், ஆவேஷம், புலி முருகன், பிரேமலு, லூசிபர், ஏஆர்எம்' ஆகிய படங்கள் இதற்கு முன்பு 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.
கடந்த ஆண்டு வெளியான மலையாளப் படங்களில் 'மஞ்சும்மேல் பாய்ஸ், தி கோட் லைப், ஆவேஷம், பிரேமலு, ஏஆர்எம், மார்க்கோ' ஆகிய ஆறு படங்கள் 100 கோடி வசூலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு வேறு எந்து ஆண்டிலும் இத்தனை படங்கள் 100 கோடி வசூலைப் பெற்றதில்லை.