22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
ஹனிப் அடேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன், சித்திக், ஜெகதீஷ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் 20ம் தேதி வெளிவந்த மலையாளப் படம் 'மார்க்கோ'. இப்படத்தில் அதிகமான வன்முறைக் காட்சிகள் இருந்ததால் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது. மலையாளத் திரையுலகில் அதிக வசூலைக் குவித்த 'ஏ' சான்றிதழ் பெற்ற ஒரு திரைப்படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது.
தற்போது படம் 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வட இந்திய மாநிலங்கள், தெலுங்கு மாநிலங்களிலும் இப்படம் வெளியாகி குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றுள்ளது.
மலையாளத்தில் 100 கோடி வசூலைக் கடந்த 9வது படமாக இந்தப் படம் சாதனை புரிந்துள்ளது. 'மஞ்சும்மேல் பாய்ஸ்' அதிகபட்சமாக 240 கோடியை வசூலித்துள்ளது. “2018, தி கோட் லைப், ஆவேஷம், புலி முருகன், பிரேமலு, லூசிபர், ஏஆர்எம்' ஆகிய படங்கள் இதற்கு முன்பு 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.
கடந்த ஆண்டு வெளியான மலையாளப் படங்களில் 'மஞ்சும்மேல் பாய்ஸ், தி கோட் லைப், ஆவேஷம், பிரேமலு, ஏஆர்எம், மார்க்கோ' ஆகிய ஆறு படங்கள் 100 கோடி வசூலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு வேறு எந்து ஆண்டிலும் இத்தனை படங்கள் 100 கோடி வசூலைப் பெற்றதில்லை.