தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
'புஷ்பா 2' படத்தின் பிரிமியர் காட்சி ஹைதராபாத்தில் நடந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அவருடைய பத்து வயது மகன் ஒரு மாத காலத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சிறப்புக் காட்சியில் மரணம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்தில், இனி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கிடையாது, டிக்கெட் கட்டண உயர்வு கிடையாது என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த வார வெள்ளிக்கிழமை 'கேம் சேஞ்சர்' மற்றும் அடுத்த வாரம் சங்கராந்தியை முன்னிட்டு 'டாகு மகாராஜ், சங்கராந்தி வஸ்துனம்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
அப்படங்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கான அனுமதி, டிக்கெட் கட்டண உயர்வு ஆகியவற்றை ஆந்திர மாநில அரசு அறிவித்துவிட்டது. ஆனால், தெலங்கானா அரசு ஏற்கெனவே அறிவித்த அறிவிப்பைத் தொடரப் போகிறதா அல்லது இறங்கி வருமா என திரையுலகினர் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
தெலங்கானா மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் இருக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், 'கேம் சேஞ்சர், சங்கராந்தி வஸ்துனம்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. அதனால், அவர் முயற்சி செய்து அனுமதி வாங்கிவிடுவார் என தெலுங்குத் திரையுலகினர் நம்புகிறார்கள்.
இந்த அனுமதி விவகாரத்தில் தெலங்கானா அரசு கண்டிப்புடன் தொடரப் போகிறதா அல்லது கனிவாக நடந்து கொள்ளுமா என ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.