என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |

'புஷ்பா 2' படத்தின் பிரிமியர் காட்சி ஹைதராபாத்தில் நடந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அவருடைய பத்து வயது மகன் ஒரு மாத காலத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சிறப்புக் காட்சியில் மரணம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்தில், இனி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கிடையாது, டிக்கெட் கட்டண உயர்வு கிடையாது என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த வார வெள்ளிக்கிழமை 'கேம் சேஞ்சர்' மற்றும் அடுத்த வாரம் சங்கராந்தியை முன்னிட்டு 'டாகு மகாராஜ், சங்கராந்தி வஸ்துனம்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
அப்படங்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கான அனுமதி, டிக்கெட் கட்டண உயர்வு ஆகியவற்றை ஆந்திர மாநில அரசு அறிவித்துவிட்டது. ஆனால், தெலங்கானா அரசு ஏற்கெனவே அறிவித்த அறிவிப்பைத் தொடரப் போகிறதா அல்லது இறங்கி வருமா என திரையுலகினர் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
தெலங்கானா மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் இருக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், 'கேம் சேஞ்சர், சங்கராந்தி வஸ்துனம்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. அதனால், அவர் முயற்சி செய்து அனுமதி வாங்கிவிடுவார் என தெலுங்குத் திரையுலகினர் நம்புகிறார்கள்.
இந்த அனுமதி விவகாரத்தில் தெலங்கானா அரசு கண்டிப்புடன் தொடரப் போகிறதா அல்லது கனிவாக நடந்து கொள்ளுமா என ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.