நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

நடன இயக்குனர் கல்யாண் தமிழில் பல முன்னணி நடிகர்களில் இடம்பெறும் பாடல்களுக்கு நடனம் இயக்கியுள்ளார். ஆனால், நடிகர் அஜித் குமாரின் வில்லன், மங்காத்தா, அட்டகாசம், வேதாளம், விஸ்வாசம், துணிவு தற்போது விடாமுயற்சி வரை அஜித்தின் பெரும்பாலான பட பாடல்களுக்கு நடனம் இயக்கியவர் கல்யாண்.
கல்யாண் அளித்த பேட்டியில் அஜித் குமார் குறித்து கூறியதாவது, "பைக் மீதான காதலை இப்போ வரைக்கும் அவர் கைவிடவில்லை. எப்போதும் நேசித்து கொண்டே இருக்கிறார். அப்படிபட்ட தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்ட மனிதரோடு தொடர்ந்து பயணித்து வருகிறேன். அதே மாதிரியும் சினிமாவையும் ரொம்ப நேசிக்கின்றார். தயாரிப்பாளர் அவரால் கஷ்டப்படக் கூடாது, நஷ்டப்படக் கூடாது என மிக கவனமாக உள்ளார். உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் அவரால் படப்பிடிப்பு பாதிக்கக் கூடாது என முடித்து தருவார்". என இவ்வாறு கூறினார்.