நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
நடன இயக்குனர் கல்யாண் தமிழில் பல முன்னணி நடிகர்களில் இடம்பெறும் பாடல்களுக்கு நடனம் இயக்கியுள்ளார். ஆனால், நடிகர் அஜித் குமாரின் வில்லன், மங்காத்தா, அட்டகாசம், வேதாளம், விஸ்வாசம், துணிவு தற்போது விடாமுயற்சி வரை அஜித்தின் பெரும்பாலான பட பாடல்களுக்கு நடனம் இயக்கியவர் கல்யாண்.
கல்யாண் அளித்த பேட்டியில் அஜித் குமார் குறித்து கூறியதாவது, "பைக் மீதான காதலை இப்போ வரைக்கும் அவர் கைவிடவில்லை. எப்போதும் நேசித்து கொண்டே இருக்கிறார். அப்படிபட்ட தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்ட மனிதரோடு தொடர்ந்து பயணித்து வருகிறேன். அதே மாதிரியும் சினிமாவையும் ரொம்ப நேசிக்கின்றார். தயாரிப்பாளர் அவரால் கஷ்டப்படக் கூடாது, நஷ்டப்படக் கூடாது என மிக கவனமாக உள்ளார். உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் அவரால் படப்பிடிப்பு பாதிக்கக் கூடாது என முடித்து தருவார்". என இவ்வாறு கூறினார்.