ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

மலையாள திரையுலகில் 50 வருடங்களாக பிரபலமான நாவல் எழுத்தாளர், கதாசிரியர் மற்றும் இயக்குனர் என பன்முக திறமையுடன் வலம் வந்தவர் எம்.டி வாசுதேவன் நாயர், இவரது பல சிறுகதைகளும் நாவல்களும் மலையாளத்தில் திரைப்படங்களாக உருவாகி இருக்கின்றன. மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்கள் இவரது கதைகளிலும் இவரது டைரக்ஷனிலும் கூட நடித்திருக்கிறார்கள்.
91 வயதான இவர் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார். மலையாளத் திரை உலகை சேர்ந்தவர்களும் இந்தியாவில் உள்ள பல்வேறு திரையுலக, அரசியல் பிரபலங்களும் கூட இவரது மறைவுக்கு தங்களது இரங்கல்களை தெரிவித்தனர், மோகன்லால் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்,
ஆனால் இவரது கதையில் உருவான ஒரு வடக்கன் வீரகதா, பழசி ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து பெயர் பெற்றவரான மம்முட்டி இவர் இறந்த சமயத்தில் அசர்பைஜான் நாட்டில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தார். அதனால் அவரால் உடனடியாக கேரளா திரும்ப முடியவில்லை. மேலும் படப்பிடிப்பு முடிந்து அவர் திரும்ப முயற்சித்த சமயத்தில் அசர்பைஜானில் சில நாட்களுக்கு முன்பு ஏற்படுத்த விமான விபத்து காரணமாக அவரது பயணம் இன்னும் சில நாட்கள் தள்ளிப் போய் நேற்று தான் அவர் கொச்சி வந்து சேர்ந்தார். வந்தவுடனேயே நேரடியாக கோழிக்கோட்டில் உள்ள எம்.டி வாசுதேவன் நாயர் வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்த மம்முட்டி அவரது மனைவி கலாமண்டலம் சரஸ்வதி மற்றும் மகள் அஸ்வதி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். மம்முட்டியுடன் பிரபல காமெடி நடிகரும் இயக்குனருமான ரமேஷ் பிஷரோடியும் உடன் சென்று இருந்தார்.