அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
தமிழ்த் திரையுலகில் அறிமுகானாலும் இங்கு சரிவர வாய்ப்புகள் கிடைக்காமல் ஹிந்திக்குச் சென்று கனவுக்கன்னி எனப் பெயர் பெற்றவர் நடிகை ஹேமமாலினி. தஞ்சாவூர் மாவட்டத்தின் அம்மன்குடி என்ற ஊரில் பிறந்தவர். 1963ல் வெளிவந்த 'இது சத்தியம்' என்ற படத்தில் நடனம் மட்டும் ஆடியிருந்தார். அந்தக் காலத்திய தமிழ் இயக்குனர்கள் ஹேமமாலினியின் திறமையை உணராமல் போய்விட்டார்கள். ஹிந்திக்குச் சென்று 70களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கினார்.
தனது அம்மா ஜெயலட்சுமியின் பிறந்தநாளை முன்னிட்டு நெகிழ்ச்சியான பதிவொன்றைப் பதிவிட்டுள்ளார்.
“ஆண்டின் இந்த நாள் என் இதயத்திற்கு மிக நெருக்கமான நாள். என் அன்பான அம்மாவின் பிறந்தநாளை நான் எப்போதும் கொண்டாடத் தவறுவதில்லை. அவர் எனக்காகச் செய்த அனைத்திற்கும் நன்றி. அவரது அற்புதமான ஆளுமை, சினிமா துறையிலும் அதற்கு அப்பாலும் அவர் உருவாக்கிய நல்லுறுவுதான் எனது வாழ்க்கை வடிவமைத்தது. நான் நானாக இருக்க வைத்தது. நன்றி அம்மா, உங்களை நேசிக்கிறேன்,” எனக் குறிப்பிட்டு அம்மாவுடன் இருந்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.