தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருந்த தர்மேந்திரா, நடிகையாக இருந்த ஹேமமாலினி ஆகியோர் இன்று தங்களது 43வது திருமண நாளைக் கொண்டாடி உள்ளனர். அது பற்றிய தகவலைப் பகிர்ந்து தனது கணவர் தர்மேந்திராவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் ஹேமமாலினி.
தமிழகத்தைச் சேர்ந்த ஹேமமாலினி, தமிழ்ப் படங்களில் நடிக்க முயன்று ஓரிரு படங்களில் மட்டும் முக்கியத்துவமில்லாத கதாபாத்திரங்களில் நடித்தார். அதன்பின் ஹிந்தியில் ராஜ்கபூரின் 'சப்னோ கா சௌதாகர்' படம் மூலம் 1968ம் ஆண்டு அறிமுகமானார். அதன்பின் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்தார் ஹேமமாலினி.
1970ல் தர்மேந்திரா ஜோடியாக 'தும் ஹசின் மெய்ன் ஜவான்' என்ற படத்தில் முதல் முறையாக நடித்தார். ஏற்கெனவே திருமணமாகி இரண்டு மகன்கள், இரண்டு மகள்களுடன் இருந்த தர்மேந்திராவை 1980ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ஹேமமாலினி. அவர்களுக்கு இஷா தியோல், அஹானா தியோல் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மணிரத்னம் இயக்கிய 'ஆய்த எழுத்து' படத்தில் சூர்யா ஜோடியாக நடித்தவர் இஷா தியோல்.
இன்று திருமண நாளைக் கொண்டாடும் ஹேமமாலினி, தர்மேந்திரா தம்பதியினருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.