விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவான தெலுங்குப் படமான 'புஷ்பா 2', பான் இந்தியா படமாக கடந்த மாதம் டிசம்பர் 5ம் தேதி வெளியானது. படம் வெளியாகி தற்போது நான்கு வாரங்கள் முடிவடைந்துள்ளது.
இந்த நான்கு வாரங்களில் உலகம் முழுவதும் 1799 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மொத்த வசூலை மட்டுமே தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. மொழி வாரியாக, மாநிலங்கள் வாரியாக அவர்கள் வெளியிடுவதில்லை. இருந்தாலும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் விசாரித்தவரையில் கிடைத்த வசூல் தகவல்கள் இதோ..
ஹிந்தியில் மட்டும் இப்படம் 900 கோடி வசூலையும், தெலுங்கில் 350 கோடி வசூலையும், தமிழகத்தில் 75 கோடி வசூலையும், கர்நாடகாவில் 95 கோடி வசூலையும், கேரளாவில் 15 கோடி வசூலையும், வெளிநாடுகளில் 364 கோடி வசூலையும் பெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள்.
இதுவரை தெலுங்குத் திரைப்படங்களில் 'பாகுபலி 2' படம் ஆந்திரா, தெலங்கானாவில் 415 கோடி வசூலை அள்ளியது. ஆனால், 'புஷ்பா 2' படம் அந்த சாதனையை முறியடிக்காமல் 350 கோடி வசூலை பெற்றுள்ளது.