ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவான தெலுங்குப் படமான 'புஷ்பா 2', பான் இந்தியா படமாக கடந்த மாதம் டிசம்பர் 5ம் தேதி வெளியானது. படம் வெளியாகி தற்போது நான்கு வாரங்கள் முடிவடைந்துள்ளது.
இந்த நான்கு வாரங்களில் உலகம் முழுவதும் 1799 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மொத்த வசூலை மட்டுமே தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. மொழி வாரியாக, மாநிலங்கள் வாரியாக அவர்கள் வெளியிடுவதில்லை. இருந்தாலும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் விசாரித்தவரையில் கிடைத்த வசூல் தகவல்கள் இதோ..
ஹிந்தியில் மட்டும் இப்படம் 900 கோடி வசூலையும், தெலுங்கில் 350 கோடி வசூலையும், தமிழகத்தில் 75 கோடி வசூலையும், கர்நாடகாவில் 95 கோடி வசூலையும், கேரளாவில் 15 கோடி வசூலையும், வெளிநாடுகளில் 364 கோடி வசூலையும் பெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள்.
இதுவரை தெலுங்குத் திரைப்படங்களில் 'பாகுபலி 2' படம் ஆந்திரா, தெலங்கானாவில் 415 கோடி வசூலை அள்ளியது. ஆனால், 'புஷ்பா 2' படம் அந்த சாதனையை முறியடிக்காமல் 350 கோடி வசூலை பெற்றுள்ளது.