மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' |

மலையாளத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு இயக்குனர் ஜீத்து ஜோசப் டைரக்சனின் மோகன்லால் மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து சில வருடங்கள் கழித்து அதன் இரண்டாம் பாகமும் வெளியாகி முதல் பாகத்திற்கு குறைவில்லாத சமமான வெற்றியை பெற்றது. இந்த படத்தில் ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்து தலைவராக மோகன்லாலும் அவரது மனைவியாக நடிகை மீனாவும் நடித்திருந்தனர். இந்த படம் மீனாவுக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததுடன் அவரது புதிய இன்னிங்ஸையும் வெற்றிகரமாக துவக்கி வைத்தது.
ஆனால் முதலில் இந்த கதாபாத்திரம் என்னைத்தான் தேடி வந்தது, ஆனால் என்னால் நடிக்க முடியாமல் போனது என்று தற்போது வருத்தத்துடன் ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் நடிகை ஷோபனா. எண்பது 90களில் மோகன்லாலுடன் இணைந்து பல படங்களில் ஜோடியாக நடித்தவர் தான் ஷோபனா. திரிஷ்யம் பட வாய்ப்பு வந்தபோது அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டிருந்தார். ஆனாலும் அந்த நேரத்தில் வினீத் சீனிவாசன் இயக்கத்தில் திர என்கிற படத்தில் நான் நடித்து வந்தேன். அதன் காரணமாக திரிஷ்யம் படத்திற்கு என்னால் தேதிகள் ஒதுக்க முடியவில்லை. அப்படி ஒதுக்க முடியாது என்பது தெரிந்ததால் திரிஷ்யம் படத்தின் ஸ்கிரிப்ட்டை கூட நான் படிக்கவில்லை என்று கூறியுள்ளார் ஷோபனா.




